பக்கம் : 1074 | | (இ - ள்.) ஐயனது அழகு கண் பருக - அமிததேசனின் அழகினைத் தன் கண்கள் விரும்பிப் பருகாநிற்ப, மையணி மழை முகில் வண்ணன் - கரிய அழகையுடைய மழை பெய்யும் முகில் போன்ற நிறமுடைய நம்பியே, மாமனார் - உன் மாமடிகள் ஆகிய சடிவேந்தர், வையகம் உடையவற்கு - உலக முழுதும் உடைய நினக்கு, உணர்த்தி வா என - இச்செய்தியை அறிவித்து வருதி என்று அடியேற்குக் கட்டளையிட்டருள, நெய்யொடு வந்தனன் - யான் நெய்கொண்டு வந்துள்ளேன், நிலைமை இன்னதே - அரசே! யான் கொணர்ந்த செய்தி யிருந்தவாறு இது, (எ - று.) மழைமுகில் வண்ணன் : விளி. அக்குழந்தையின் அழகினைத் தன் கண்ணாற் பருகிய சடிமன்னர் இச் செய்தியை நினக்கு அறிவிக்கும்படி எனக்குக் கட்டளையிடுதலாலே யான் நெய்யோடு வந்தேன் என்று அத்தூதன் கூறினான் என்க. | (606) | | நம்பி அத்தூதற்குச் சிறப்பளித்தல் | 1737. | என்றவன் மொழிதலு மிலங்கு நேமியான் நின்றகஞ் சுடர்தரு நிதியி 1னீத்தமங் கன்றவற் கருளின னரசர் செல்வமோ டொன்றின னுவந்துதன் னுலக மெய்தினான். | (இ - ள்.) என்று அவன் மொழிதலும் - இவ்வாறு அவ்விச்சாதர தூதன் விளம்பியவுடன், இலங்கு நேமியான் - திகழ்கின்ற ஆழிப்படையேந்திய திவிட்ட மன்னன், நின்று அகம் சுடர் தரும் நிதியின் நீத்தம் - நிலைத்து நின்று உள்ளொளி உமிழும் மணி முதலிய நிதிகளாகிய வெள்ளத்தை, அங்கு அன்று அவற்கு அருளினன் - அவ்விடத்தே அற்றை நாளிலேயே அந்தத் தூதனுக்கு வழங்கினான், அரசர் செல்வமோடு - அத்தூதனும் அரசர்கள் விழைதற்குரிய பெருஞ் செல்வத்துடனே, ஒன்றினன் - பொருந்தியவனாய், உவந்து - பெரிதும் மகிழ்ந்து, தன் உலகம் எய்தினான் - தனது விச்சாதரருலகினை அடைந்தான், (எ - று.) என்று தூதன் அறிவித்தவுடனே மகிழ்ந்த நம்பி, அவனுக்கு நிதியின் நீத்தம் அன்று அருள, அதனோடே அத்தூதன் தன்னுலகிற்கு ஏகினான், என்க. | (607) | |
| (பாடம்) 1 னீத்தமுங். | | |
|
|