விசயன் இவ்வாறு வளர்ந்து கலைபயிலும்போது சுயம்பிரபை ஒரு பெண் மகவை ஈன்றாள் என்க. ஏமச்செல்வம் - காத்தற் றொழிலாகிய அரசியற் செல்வம். ஓமச் செல்வம் - கொண்டு இனிதேத்தலாவது, வேள்வி முதலியனசெய்து இக்குழவியின் நன்மையைப் போற்றுதல் என்க. |
(614) |
|
அப் பெண் மகவிற்குச் “சோதிமாலைÓ எனப் பெயர் சூட்டல் |
1745. | பாரார் செல்கைப் பல்கிளை யெல்லா முடனீண்டிப் பேரா வென்றிக் கொன்றிய வாறு பெயரிட்டுச் சீரா 1ரோகை விஞ்சையர் சேணி செலவிட்டுக் காரார் வண்ணன் காதலொ டின்பக் கடலாழ்ந்தான். |
(இ - ள்.) பார் ஆர் செல்கை பல்கிளை எல்லாம் - பூமியிலே வாழா நின்ற செல்லுதற்குரிமையுடைய பலவாகிய சுற்றம் எல்லாம், உடன் ஈண்டி - ஒருங்கே கூடாநிற்ப, பேரா வென்றிக்கு ஒன்றியவாறு - மாறுபடாத தனது வெற்றிக்குப் பொருந்தியதாம்படி, பெயர் இட்டு - அப்பெண் மகவிற்கும் பெயர் சூட்டி, சீர் ஆர் ஓகை - சிறப்புடைய இம்மகிழ்ச்சிக்குரிய நற்செய்தியை, விஞ்சையர் சேணிசெலவிட்டு - விச்சாதரருலகாகிய இரதநூபுரச் சக்கிரவாளத்திற்கும் கூற நெய்யொடு தூதுவரைப் போக்கி, கார் ஆர் வண்ணன் - முகில்போன்ற நிறமுடையனாகிய திவிட்டநம்பி, காதலொடு இன்பக்கடலாழ்ந்தான் - மிக்க அன்புடனே இன்பக் கடலில் முழுகினான், (எ - று.) சேணி - இரதநூபுரத்துச் சக்கிரவாளம். ஓகை - உவகை. அப்பெண்மகவு பிறந்தவுடன் சுற்றத்தார் சூழ அம்மகவிற்குப் பெயரிட்டு அச்செய்தியைத் தக்கிண சேடிக்கும் சொல்லத் தூதுவிட்டு நம்பி காதலாலே இன்பக் கடலுள் ஆழ்ந்தான் என்க. |
(615) |
|
|
1746. | ஐயன் றானு மவ்வகை யாலே வளர் 2வெய்த மையுண் கண்ணி மாபெருந் தேவி மகிழ் 3தூங்கத் தெய்வம் பேணிப் பெற்றனர் பேணுந் திருவேபோல் மெய்யின் சோதி சூழொளி மின்னின் 4பெயராளும். |
|
|
(பாடம்) 1 ரோதை. 2 வெய்தி. 3தூங்கி. 4 பெயராளை. |