பக்கம் : 1080
 

       (இ - ள்.) ஐயன் தானும் - விசயனும், அவ்வகையாலே - யாம் முன்னர்க்கூறிய
வகையால், வளர்வெய்த - வளரா நிற்ப, மாபெருந்தேவி - கோப்பெருந்தேவியாகிய
சுயம்பிரபை, மகிழ்தூங்க - உலகம் மகிழும்படி, தெய்வம் பேணி பெற்றனர் - தெய்வத்தை
வழிபட்டு அதனருளாலே எய்தியவர்கள், பேணும் - ஓம்புகின்ற, திருவே போல் -
செல்வத்தைப் போன்று பெற்று ஓம்பாநின்ற, மையுண்கண்ணி - மை தீட்டப்பெற்ற
கண்களையுடைய, மெய் இன் சோதி சூழ் - திருமேனி இயற்கையிலேயே இனிய ஒளியாலே
சூழப்பெற்ற, ஒளி மின்னின் பெயராளும் - சோதிமாலை an்னும் பெயரையுடைய அப்பெண்
மகளும், (எ - று.)

     பெயராளும் வளர்கின்றாள் என அடுத்த செய்யுளில் முடியும். பெயர் சோதிமாலை என்க.

     விசயன் அவ்வாறு வளர்வுழி பெருந்தேவி மகிழ்தூங்க திருவே போல் சோதிமாலையும்
(வளர்கின்றாள்) என்க.

(616)

 

சோதிமாலை வளர்தற் சிறப்பு

1747. தேதா வென்றே தேனொடு 1வண்டு திசைபாடும்
போதார் சாயற் பூங்கொடி போலப் பொலிவெய்தித்
தாதார் கோதைத் தாயரொ டாயம் புடைசூழ
மாதார் சாயன் மாமயி லன்னாள் வளர்கின்றாள்.
 
     (இ - ள்.) தேனொடு வண்டு - தேனும் வண்டும், திசை - திக்குகளிலே, தே தா
என்றே பாடும் - தேதா என்னும் வாய் பாடுபட இன்னிசை பாடாநின்ற, போது ஆர் - மலர்
பொருந்திய சாயல் பூங்கொடிபோல - அழகிய பூங்கொடியைப் போல, பொலிவு எய்தி -
அழகுபெற்று, தாது ஆர் கோதைத் தாயரொடு ஆயம் புடைசூழ - பூந்துகள் பொருந்திய
மாலையணிந்த செவிலியரோடே விளையாட்டு மகளிர்களும் தன்னைச் சூழாநிற்ப, மாது ஆர்
சாயல் மாமயில் அன்னாள் வளர்கின்றாள் - அழகு பொருந்திய தோற்றமுடைய சிறந்த
மயிலை ஒத்த சோதிமாலையும், வளர்வாளாயினாள், (எ - று.)

     திசை - இசையுமாம், “எனக்கு வந்து தீயோர் திசைத்ததுமில்லைÓ (கம்பராமாயணம்,
கைகேசி சூழ்வினை.)

     தே தா என்றது இசையின் வாய்பாடு. தே தா என்று வண்டுகள் பாடும் பூங்
கொம்புபோன்று அழகெய்தித் தாயரும் ஆயமும் புடைசூழ மயிலன்னாள் வளர்கின்றாள்
என்க. மாது - அழகு, ஆயம் - விளையாட்டு மகளிர் குழு.

(617)

 

     (பாடம்) 1 வண்டுந்.