பக்கம் : 1081
 

புலவர் கூற்று - இனிச் சோதிமாலை வரலாறு கூறுவல்
எனத் தோற்றுவாய் செய்தல்

வேறு

1748. மழலைக் கனிவாய் மணிவண்டு
     வருடி மருங்கு பாராட்ட
1அழனக் கலர்ந்த வரவிந்த
     வமளி சேர்ந்த விளவன்னம்
கழனிச் செந்நெற் கதிரென்னுங்
     கவரி வீசக் கண்படுக்கும்
பழனக் குவளை நீர்நாடன்
     பாவை வார்த்தை பகருற்றேன்.
 
     (இ - ள்.) அழல் நக்கு அலர்ந்த அரவிந்த அமளி - தீயை ஒத்து விளங்கி
மலர்ந்துள்ள செந்தாமரைப் பூம்படுக்கையிலே, சேர்ந்த இள அன்னம் - பொருந்திய
இளையையுடைய அரச அன்னம், மழலைக்கனிவாய் மணிவண்டு - மழலைத்தன்மை
பொருந்திய கனிவுமிக்க வாயினையுடைய மணிநிற வண்டுகள், வருடி மருங்கு பாராட்ட -
தன் அடிகளை வருடித் தனது பக்கத்தே புகழ் பாடிப் பாராட்டாநிற்ப, கழனிச் செந்நெல்
கதிர் என்னும் - வயலிலே விளைந்த செந்நெற்கதிராகிய, கவரி வீச - சாமரை இரட்ட,
கண்படுக்கும் - இனிதே உறங்கும், பழனக்குவளை நீர்நாடன் - வயல்களையுடைய
செங்கழுநீர் மலர்ந்த நீர் நீலைகளையுடைய சுரமை நாட்டரசனாகிய திவிட்டனின், பாவை -
மகளாகிய சோதிமாலையின், வார்த்தை - செய்தியை, பகருற்றேன் - இனிக்
கூறத்தொடங்குகின்றேன்,
(எ - று.)

     செந்தாமரை மலராகிய அணியிலே, மணிவண்டு புகழ்பாடிப் பாராட்ட, செந்நெற்
கதிராகிய கவரியசைய, இளவன்னம் இனிதே கண்படைகொள்ளும் வளமுடைய, பழனக்
குவளை நீர்நாடனாகிய திவிட்டநம்பியின் மகள், சோதிமாலையின் வரலாற்றை இனிச்
சொல்வேன் என்று தேவர் கூறினார் என்க.

(618)

 
 

சோதிமாலை விளையாட்டாயம் அடைதல்

1749. செம்பொற் சிலம்புங் கிண்கிணியுஞ்
     2செல்வச் செஞ்சீ றடிபோற்ற
வம்பத் துகிலின் வடஞ்சூழ்ந்த
     வல்குன் மணிமே கலை 3மருட்ட
அம்பொற் சுருளை யிருபாலு
     மளக வல்லி யருகிலங்கப்
பைம்பொற் சுடிகை நிழறுளங்கப்
     படர்ந்தா 4டாயம் படிந்தாளே.
 

     (பாடம்) 1 அழனக் கமலந்தவ தறிவந். 2 செல்வஞ். 3 மருட்டி.

     4 டரவம் படந்தாளே.