பக்கம் : 1083 | | பந்தாடுதல் | 1751. | காவி நாணுங் கண்ணார்தங் கையி 1னேந்துங் கந்துகங்கள் ஆவி தாமு முடையனபோ லடிக்குந் தோறு மடங்காது பூவி னார்ந்த மணிநிலத்துப் பொங்கி யெழுந்து பொன்னேந்தி நாவி நாறு மிளங்கொங்கைத் தடங்கள் சென்று 2நணுகியவே. | (இ - ள்.) காவி நாணும் கண்ணார் - நீலோற்பலம் மலரும் நாணுதற்குரிய அழகுடைய கண்களையுடைய மகளிர்கள், தம் கையின் ஏந்தும் - தங்கள் கைகளிலே கொண்ட, கந்துகங்கள் - பந்துகள், தாமும் ஆவி உடையனபோல் - தாங்களும் உயிருடையனபோன்று. அடிக்குந்தோறும் - அம்மாதர் தம்மைப் புடைக்குந்தோறும், அடங்காது - அடக்கமின்றி, பூவின் ஆர்ந்த மணிநிலத்து - மலர் சிந்திப்பரவிய அழகிய நிலத்திலே மோதுண்டு, பொங்கி எழுந்து - உயர்ந்து எழுந்து, பொன் ஏந்தி நாவிநாறும் இளம் கொங்கை - பொற்றேமல் படர்ந்து கத்தூரி மணக்கும் இளைய முலையாகிய, தடங்கள் சென்று நணுகியவே - இடங்களைச் சென்று அடைந்தன, (எ - று.) கண்ணார் ஏந்தும் கந்துகங்கள் அவர் அடிக்குந் தோறும் உயிருடை யனபோல் அடங்காதனவாய்ப் பொங்கி எழுந்து அவர்தம் கொங்கைத்தடத்தை அணுகின என்க. கொங்கைகளைத் தம்மினமென அணுகின என்க. | (621) | | இதுவுமது | 1752. | கரிய குழலும் பொற்றோடுஞ் செய்ய வாயுங் 3கதிர் முறுவல் மரிய திசையு மதிமயங்கு 4மம்பொன் முகத்து மடவார்கள் திரியத் தம்மைப் புடைத்தாலுஞ் சென்று சேர்ந்து திளைக்குமால் அரிய செய்யுங் காமுகர்போ லளிய வந்தோ வடங்காவே. | |
| (பாடம்) 1 னேந்து. 2 நணுகுமே. 3 வெண்முகத்தின். 4 போதினினிய. | | |
|
|