பக்கம் : 1084
 

       (இ - ள்.) கரிய குழலும் - கரிய கூந்தலும், பொற்றோடும் - பொன்னாலியன்ற
தோடுகளும், செய்ய வாயும் - சிவந்த வாயும், கதிர்முறுவல் - ஒளியுடைய புன்முறுவலும்
உடைய, மதிமயங்கும் - திங்களைப்போன்ற, அம்பொன் முகத்து - அழகிய
பொன்னிறமமைந்த முகத்தையுடைய, மடவார்கள் - அம்மகளிர்கள், மரிய - பொருந்திய,
திசையும் திரிய - திசைகளிலே செல்ல, தம்மை புடைத்தாலும் - தம்மை அடித்தபோதும்,
சென்று சேர்ந்து திளைக்கும் - மீண்டும் சென்று எய்தி அம்மகளிரைப் பொருந்தா நிற்கும்,
அளிய - இரங்கத்தக்கன, அந்தோ - ஐயகோ, காமுகர் போல் அரிய செய்யும் -
காமுகர்களைப்போன்று செய்தற்கரிய செயல்களைச் செய்யும், அடங்கா - அடக்கம்
இல்லனவாய்,
(எ - று.)

     மடவார்கள் திசையிலே செல்லும்படி அப்பந்துகளைப் புடைக்கும் பொழுதும்
அவைகள் காமுகர் போன்று அம்மகளிரைச் சென்று தழுவா நிற்கும், தம்மை அகலப்
புடைக்கும் மகளிரை விரும்பும் அவை அளியவே என்றார் என்க.

(622)

இதுவுமது

1753. செம்பொற் சுருளை மெல்விரலாற்
     றிருத்திச் செறிந்த தேரல்குல்
வம்பத் துகிலின் வடஞ்சூழ்ந்து
     மணிமே கலையுந் 1தானேற்றி
அம்பொற் குரும்பை மென்முலைமே
     லணிந்த 2பொன்ஞா ணருகொடுக்கிப்
பைம்பொற் றிலத நுதலொதுக்கிப்
     பாவை பந்து கைக்கொண்டாள்.
 
     (இ - ள்.) செம்பொன் சுருளை - செவ்விய பொன்னாலாய சுருளை என்னும்
காதணியை, மெல் விரலால் திருத்தி - நழுவாதபடி தனது மெல்லிய விரலாலே நன்கு
திருத்திக்கொண்டு, தேர் அல்குல் - தேர்த்தட்டை ஒத்த அல்குலிடத்தே, செறிந்த -
பொருந்திய, வம்பத்துகிலின் - புதிய ஆடையின் மிசை வடம் சூழ்ந்து - மணிவடத்தை
நன்கு விசித்து, மணிமேகலையும்தான் - மணிமேகலையையும், ஏற்றி - ஏறச்செறித்து,
அம்பொன் குரும்பை மென்முலைமேல் - அழகிய பொற்றேமல் படர்ந்த தெங்கிளங்
குரும்பை போன்ற மெல்லிய முலைகளின் மிசை, பொன்ஞாண் அருகு ஒடுக்கி - விசித்த
பொற்சரட்டின் பக்கங்களை ஒடுக்கி, பைம்பொன் திலக நுதல் ஒதுக்கி - பசிய
பொற்றிலதமிடப்பட்ட நெற்றியிலே சரிந்த கூந்தலை ஒதுக்கிக் கொண்டு, பாவை -
கொல்லிப்பாவை போன்ற சோதிமாலை, பந்து கைக்கொண்டாள் - ஆடுதற்குப் பந்தினைத்
தன் கையிலே ஏந்தா நின்றாள், (எ - று.)
 

     (பாடம்) 1 தானெற்றி. 2 மென்ஞா.