பக்கம் : 1089 | | | புரிமணிக் குழல்புறந் தாழப் போந்தரோ கருமணி யொளியவன் கழல்சென் றெய்தினாள். | (இ - ள்.) அருமணி முடியவன் அருள் இது என்றலும் - பெறற்கரிய மணிகளானியன்ற முடியை உடைய உன்தந்தையின் பணி இஃதென அவ்வேவல் மகளிர்கள் கூறியவுடனே, பாவை - சோதிமலை, பருமணிப் பந்து கைவிட்டு - பரிய அழகுடைய பந்தாடுதலைத் தவிர்ந்து, தன் புரிமணிக்குழல் புறந்தாழ - தனது விரும்பற்குரிய நீலமணி போன்ற நிறமுடைய அளகம் புறத்தே வீழும்படி, போந்து - வந்து, கருமணி ஒளியவன் - நீலமணி வண்ணனாகிய திவிட்டனுடைய, கழல்சென்று எய்தினாள் - திருவடிகளை அடைந்தான், அரோ: அசை, (எ - று.) சோதிமாலை பந்தாடுதலைக் கைவிட்டுத் தந்தையிடம் சென்றனள் என்க. | (628) | | 1759. | செல்வியின் எழில்நலங்கண்டு திவிட்டன் மகிழ்தல் மங்கையை வலப்புடைக் குறங்கின் மேலிரீஇ அங்கையா லணிநுத லரும்பு நீர்துடைத் தெங்குமி லுவகையோ டினிதி ருந்தபின் நங்கைத னலங்கிளர் மேனி நோக்கினான். | (இ - ள்.) மங்கையை வலப்புடைக் குறங்கின் மேல் இரீஇ - சோதிமாலையைத் திவிட்டன் தனது வலப்பக்த்துத் தொடையின் மேல் அமரச் செய்து, அங்கையால், அணி நுதல் அரும்பும் நீர் துடைத்து - தன் அழகிய கைகளாலே அவளது அழகிய நெற்றியில் அரும்பியுள்ள வியர்வைநீரைத் துடைத்து, எங்கும் இல் உவகையோடு இனிது இருந்தபின் - எவ்விடத்தேயும் பெறலரும் பெருமகிழ்ச்சியோடே இருந்தபின்னர், நங்கை தன் நலங் கிளர் மேனி நோக்கினான் - சோதிமாலையின் அழகு மிக்க திரு மேனியின் மாண்பினைப் பார்த்தனன், (எ - று.) திவிட்டன் சோதிமாலையைப் பார்க்க நேர்ந்தகாரணம் அவளுடைய பருவமுதிர்ச்சியின் சிறப்பே என்க. சோதிமாலையைத் தன் வலப்பக்கத்துத் தொடையிலே அமரச்செய்து நுதலின்கண் வியர்வையைத் துடைத்து உவகையோடே இருந்து அவள் மேனியை நோக்கினான் என்க. | (629) | | இதுவுமது | 1760. | இளமையா லெழுதரு மிணைமென் கொங்கையின் வளமையாற் பொலிதரும் வனப்பின் மாட்சியால் | |
| | | |
|
|