பக்கம் : 109
 

வியர்வையைக் காயுமாறு செய்தலால் தானும் மணத்தினைப் பெற்ற தென்றற் காற்றானது
மீண்டும் மாளிகைகளிடத்திலே சென்று வீசுமாறு வெள்ளிலோத்திர மரங்கள் பொருந்திய
பொழிலிலே சென்று மேலும் மணப்பெருக்கையும் குளிர்ச்சியையும் பெறும் என்க.

     வெள்ளிலோத்திரம் என்பது மணமும் குளிர்ச்சியும் ஒருங்கமைந்த ஒருவகை மரம்.
 

( 16 )

பலவகை மரங்கள்

135. ஆந்து ணர்த்த மாலமும்ம சோக பல்ல வங்களும்
தாந்து ணர்த்த சந்தனத் தழைத்த லைத்த டாயின
மாந்து ணர்ப்பொ தும்பர்வந்து 1வைக மற்ற தூன்றலால்
தேந்து ணர்ச்சு மந்தொசிந்த சைந்த தேவ தாரமே.
 

     (இ - ள்.) ஆம்துணர் தமாலமும் - புதிதாக மலர்ந்த பூங்கொத்துக் களையுடைய
தமால மரங்களும்; அசோக பல்லவங்களும் - அசோக மரத்தின் தழைகளும்; துணர்த்த
சந்தனத் தழைத்தலை - பூங்கொத்துக்களை யுடையவாகிய சந்தனத்தழையின் மேல்; தடாயின - வளைந்து பொருந்தின. மாந்துணர்ப் பொதும்பர் வந்து வைக - மாமரங்களின்
பூங்கொத்துக்களோடு கூடிய கிளைச்செறிவு வந்து தம்மேல் தங்க; அது ஊன்றலால் -
அக்கிளைச் செறிவு அழுத்துதலால்; தேவதாரம் - தேவதார மரங்கள்; தேந்துணர் சுமந்து
ஒசிந்து அசைந்த - தமது தேனையுடைய பூங்கொத்துக்களுடனே அந்தச் சுமையையுந்
தாங்கித் துவண்டு மெலிந்தன. (எ - று.)

     தேவதார மரங்கள் மாங்கிளைச் செறிவு ஊன்றுதலாகிய செயற்கைப் பாரத்தின்
மிகுதியைத் தாங்கமாட்டாமல் துவண்டு மெலிந்தன என்பதாம். மாந்துணர் - மரப்பெயர்
முன்னர் இனமெல்லெழுத்து வரப்பெற்றது. பல்லவம் - தளிர். தமாலம் - பச்சிலைமரம்.

( 17 )

இன்ப துன்பம்

136. 2தெய்வ யாறு 3காந்தளஞ்சி லம்பு தேங்கொள் பூம்பொழில்
பௌவ முத்த 4வார்மணற்ப றம்பு மௌவன் மண்டபம்
எவ்வ மாடு மின்னபோலி டங்க ளின்ப மாக்கலால்
கவ்வை யாவ 5தந்நகர்க்கு மாரனார் செய் கவ்வையே.

 


     (பாடம்) 1. வைகி. 2. தெய்வநாறு. 3. காந்தளும். 4. வார் மணற் பிறங்கன். 5. தந்நகர்க் காமனார்செய்.