பக்கம் : 1092 | | முரசறைவோர் கூற்று | 1764. | வாழ்கநம் மன்னவன் வாழ்க 1வையகம் ஆழ்கநம் மரும்பகை யலர்க 2நல்லறம் 3வீழ்கதண் புனர்பயிர் விளைக மாநிலம் 4தாழ்கமற் றருந்துயர் சாற்றக் கேண்மினே. | (இ - ள்.) வாழ்க நம் மன்னவன் - நம் வேந்தன் வாழ்க, வாழ்க வையகம் - இப்பேருலகம் வாழ்க, ஆழ்க நம் அரும்பகை - நம் அரிய பகைவர்கள் வீழ்ச்சியுறுக, அலர்க நல்லறம் - மெய்யறம் மலர்ந்தோங்குக, வீழ்க தண்புனல் - குளிர்ந்த மழை நன்கு பொழிவதாகுக, மாநிலம் பயிர் விளைக - பெரியவுலகத்தே பைங்கூழ்கள் நன்கு செழித்துப் பயன்றருக, மற்று அருந்துயர் தாழ்க - உலகத்தில் தாங்குதற் கரிய இன்னல்கள் அழிவதாக, சாற்றக் கேண்மினே - நகர் வாழ்வீர்! யாம் கூறும் நற்செய்தியைக் கேளுங்கோள் (எ - று.) “வாழ்க அந்தணர் வானவ ரானினம் வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக ஆழ்ந்த தீயதெல் லாம் அரன் நாமமே சூழ்க வையக முந்துயர் தீர்கவேÓ என்னும் தேவாரப் பாடலை இதனுடன் ஒப்புக் காண்க. | (634) | | இதுவுமது | 1765. | புள்ளணி வார்பொழிற் பொன்செய் மாநகர் உள்ளணி பரப்புமி னுயர்மின் றோரணம் வெள்ளணி விரும்புமின் விருந்து போற்றுமின் கள்ளணி மலரொடு கலங்கள் பெய்ம்மினே | (இ - ள்.) புள்ளணி வார் பொழில் பொன்செய் மாநகருள் - பறவைகளால் அழகுடைத்தாய நீண்ட பூஞ்சோலைகளுடனே அழகுற்றுத் திகழ்கின்ற நமது போதனமாநகர் அகம் எங்கும், அணி பரப்புமின் - ஒப்பனை செய்யுங்கோள், உயர்மின் தோரணம் - தோரணங்களையுயர்த்துக் காட்டுங்கோள், வெள்ளணி விரும்புமின் - மங்கலவண்ணமாகிய வெள்ளை அணிகளையே விழைந்து அணியுங்கோள், விருந்துபோற்றுமின் - விருந்தினரை நன்கு ஓம்புங்கோள், கள் அணி மலரொடு - தேன் பொதிந்த மலர்களோடே, கலங்கள் பெய்ம்மின் - அணிகலன்களை அணியுங்கோள், ஏ: அசை, (எ - று.) | |
| (பாடம்) 1மாநகர். 2 வையகம். 3 வீழ்க நம் அருந்துயர். 4 தாழ்க தண் புனலிவை. | | |
|
|