பக்கம் : 1094 | | (இ - ள்.) கொடிபடு நெடுநகர்க் கோயில் வீதிவாய் - கொடிகள் உயர்த்தப்பட்ட நீளிய நகரத்தின்கண் அரண்மனை வீதிகளிலே, இன்னணம் - இவ்வாறு, இடிபடு மழைமுகில் என்ன இடிக்கின்ற மழைமுகிலைப் போன்று, கடி படு முரசு கண் அதிர்ந்த - மணமுரசம் தம் கண்ணதிர்ந்து முழங்கினவாக, மாடவாய் மடிபடு மயில்கள் கார் என மான்றவே - மேனிலைமாடத்தே உறைகின்ற மயில்கள் இவண் முழங்குவது முகிலேயோ என மயங்குவன வாயின, (எ - று.) முரசொலி கேட்ட மயில்கள் இவ்வொலி முகிலினாலாயதோ என்று உள்ளந் திகைத்தமை இதில் உணர்த்தப்பட்டது. | (637) | | சுயம்வர விழாவிற்கு மன்னர் முதலியோர் வருதல் | 1768. | முரசொடு வரிவளை மூரித் தானையோ டரசரு மரசரல் லாரு மாயிடைத் திரைசெறி கனைகடல் சென்று 1தேர்த்தெனப் புரைசெறி புரிசையின் புறணி முற்றினார். | (இ - ள்.) முரசொடு - முரசுகளுடனேயும், வரிவளை (ஒடு) - வரிகளையுடைய சங்குகளுடனேயும், மூரித்தானையோடு - பெரிய படையுடனேயும், அரசரும் - வேந்தர்களும், அரசரல்லாரும் - வேந்தரல்லாத ஏனைய மாந்தரும், ஆயிடை - அப்பொழுது, திரை செறி கனை கடல் சென்று தேர்த்தென - அலைகள் நெருங்கிய முழக்கமுடைய கடல்கள் புடைபெயர்ந்து சென்று தேங்கினாற் போன்று, புரைசெறி புரிசையின் புறணி முற்றினார் - உயர்ச்சியும் திண்மையுமுடைய மதிலின் புறநிலத்தே சுற்றிச் சூழ்ந்தனர், (எ - று.) சுயம்வர அறிவிப்பொலியைக் கேட்டு மன்னரும் பிறரும் வந்து கூடினர் என்க. புரை - உயர்வு, செறி - செறிவு. | (638) | | | 1769. | வெண்மலைச் சென்னிமேல் விஞ்சை வேந்தரும் கண்மலைத் 2திழிதருங் கடலந் தானையர் விண்மலைத் 3திழிதரும் விளங்கு சோதியர் எண்மலைச் சிலம்பிடை யிறைகொண் டீண்டினார். | (இ - ள்.) வெண்மலைச் சென்னிமேல் சிலம்பு எண்மலை இடை விஞ்சை வேந்தரும் - இமயமலையி்ன் உச்சியிடத்தேயுள்ள எதிரொலியுடைய எட்டு மலைகளாகிய இடங்களிலே ஆட்சிசெய்யும் விச்சாதர வேந்தர்களும், கண்மலைத்து இழிதரும் கடல் அம் தானையார் - கட்பொறியை அடர்த்து இறங்குதலையுடைய கடல் போலும் மிக்க அழகிய படையை உடையராய், விண்மலைத்து இழிதரும் விளங்கு சோதியர் - விசும்பெலாம் கவர்தருமாறு | | (பாடம்) 1 தொத் தெனப், 2 திகழ்தரும். 3 தெழுதரும். | | |
|
|