பக்கம் : 1095
 

      பாயும் மிக்க ஒளியையுடையராய், இறைகொண்டு - தம் இறையாகிய
அருக்கமன்னனை அழைத்துக்கொண்டு, ஈண்டினார் - வருவாராயினர், (எ - று.)

     மலைச்சிலம்பு - சிலம்புமலை - எதிரொயையுடைய மலை யென்க. எண்மலை -
வருத்தமானம் முதலியன. கண்மலைத்தல் - கண்கொளாப் பரப்பிற்றாதல். விண்மலைத்தல் -
விண்ணை அகப்படுத்தல். விஞ்சை வேந்தர் கடல்போன்ற படையோடே தம் இறைவனை
அழைத்துக் கொண்டு ஈண்டினார் என்க.

(639)

அருக்ககீர்த்தியின் வருகை

1770. அவ்வரை யரைசர்கோ னருக்கன் றன்மகன்
செவ்வரை யனையதோட் செல்வன் றன்னொடும்
மைவரை நெடுங்கணம் மடந்தை தன்னொடும்
இவ்வரை யரைசெதிர் கொள்ள வெய்தினான்.
 
     (இ - ள்.) அவ் வரையரசர் கோன் - அம் மலைமன்னர்கட்கு இறையாகிய, அருக்கன்
- அருக்ககீர்த்தியும், தன்மகன் செவ்வரை அனையதோள் செல்வன் தன்னொடும் -
தன்மகனாகிய செவ்விய மலைபோன்ற தோள்களையுடைய அமிததேசன் என்பானொடும்,
மைவரை நெடுங்கண் அம்மடந்தை தன்னொடும் - மை தீட்டப்பெற்ற நெடிய
கண்களையுடைய அழகியாகிய சுதாரை என்னும் தன் மகளோடும், இவ்வரை யரைசு
எதிர்கொள்ள - இம் மலைமன்னர் எதிர்கொண்டழைத்து உடன்போத, எய்தினான் -
போதன நகரத்தை அடைந்தான், (எ - று.)

     திவிட்டனுடைய மைத்துனனாகிய அருக்கதீர்த்தி தன்மகனோடும் மகளோடும் வருதல்
உரைக்கப்பட்டது.

(640)

 

திவிட்டன் அருக்ககீர்த்தியை எதிர் கோடல்

1771. பொன்னகர்ப் புறத்ததோர் புரிசை வார்பொழில்
தன்னகத் தியற்றிய தயங்கு பொன்னகர்
மன்னர்கட் கிறைவன்வந் திருப்ப மண்மிசை
இந்நகர்க் கிறைவனு மெதிர்கொண் 1டெய்தினான்.
 

     (பாடம்) 1 டெய்தினார்.