பக்கம் : 1096
 

       (இ - ள்.) பொன் நகர்ப் புறத்தது ஓர் புரிசை வார்பொழில் தன் அகத்து - அழகிய
போதனநகரத்தின் பக்கத்தே உளதாகிய ஒரு மதில்சூழ்ந்த நீண்ட பூம்பொழிலின் ஊடே,
இயற்றிய தயங்கு பொன் நகர் - இயற்றப்பட்ட விளங்குகின்ற பொன்னாலியன்றதொரு
அரண்மனையின்கண், மன்னர்கட்கு இறைவன் வந்து இருப்ப - வேந்தர் வேந்தனாகிய
அருக்ககீர்த்திவந்து தங்கி இருந்தானாக, மண்மிசை இந்நகர்க்கு இறைவனும் -
மண்ணுலகின்மேல் உள்ள இப் போதன நகரத்தரசனாகிய திவிட்டமன்னனும், எதிர்
கொண்டு ஏகினான் - அருக்ககீர்த்தியை எதிர்கொள்ளச் சென்றான், (எ - று.)

     போதன நகரத்தின் புறத்தே புரிசைசூழ் பொழிலின்கண் அருக்ககீர்த்தி வந்திருப்ப,
போதன மன்னனாகிய திவிட்டன் அவனை அழைக்க எதிர்கொண்டு சென்றான் என்க.

(641)
 

இதுவுமது

1772. கண்சுட ரிலங்குவேற் 1காள வண்ணனும்
வெண்சுட ரொளியவன் றானும் விஞ்சையர்
தண்சுடர்த் தமனிய வண்ணன் றன்னொடும்
மண்சுட ருறுப்பதோர் வகைய ராயினார
 
     (இ - ள்.) கண்சுடர் இலங்குவேற் காள வண்ணனும் - தன்னிடத்தே சுடர்விட்டு
விளங்குகின்ற வேற்படையுடைய நீல வண்ணனாகிய திவிட்டனும், வெண்சுடர் ஒளியவன
தானும் - வெளிதாய்ச் சுடரும் ஒளியையுடைய விசயனும், விஞ்சையர் தண்சுடர்த் தமனிய
வண்ணன் தன்னொடும் - விச்சாதரவேந்தனாகிய குளிர்ந்த ஒளியையுடைய
பொன்வண்ணனாகிய அருக்க கீர்த்தியும் ஒன்றுகூடி, மண்சுடர் உறுப்பதோர் வகையார்
ஆயினார் - இம் மண்ணுலகத்தையே ஒளிரச்செய்யும் ஒரு தன்மையுடையர் ஆனார்,
(எ - று.)

     விசயனும் திவிட்டனும் அருக்ககீர்த்தியுமாகி மூன்று மன்னர் மக்களும் மூன்று
சுடர்கள் உலகத்தை விளக்குவதைப் போன்று தம்முடல் ஒளியால் உலகை விளக்கினர்
என்க.

(642)

 

இதுவுமது

1773. இருபுடைக் கிளைகளும் விரவி யின்னணம்
தெருவுடைத் 2திசைமுகந் 3தெளிப்பத் தேர்த்தரோ
மருவுடை மகரநீர் வளாகம் வானவர்
4உருவுடை யுலகம்வந் திழிந்த தொத்ததே.
 

     (பாடம்) 1காளை. 2 திருமுகம். 3 தெளிப்ப தொத்தரோ. 4 உருவிடை.