பக்கம் : 1097
 

     (இ - ள்.) இருபுடைக் கிளைகளும் இன்னணம் விரவி - இருதிறத்துச் சுற்றமும்
இவ்வாறு தம்முட் குழீஇ, தெருவுடைத் திசைமுகம் தெளிப்பத் தேர்த்து -
தெருக்களையுடைய திசைகளின் பகுதிகள் விளங்கும்படி தேங்குதலானே, மருவுடை மகரம
நீர் வளாகம் - மகரமீன்கள் மருவி வாழ்தலுடைய கடல் சூழ்ந்த இந் நிலவுலகத்தின்மிசை,
வானவர் - தேவர்களுடைய, உருவுடை உலகம் வந்து - எழிலுடைய விண்ணுலகம் விரும்பி
வந்து, இழிந்தது ஒத்ததே - இறங்கியதை ஒத்துத் தோன்றியது
(எ - று.)

     தேர்த்து - தேங்கி; இதனைச் செயவெனெச்சமாக்குக.

     திவிட்டநம்பி அருக்ககீர்த்தியாகிய இரு பேரரசருடைய சுற்றமும் ஒன்று கூடித்
தேங்காநிற்ப வானவருலகம் இம்மண்ணுலகை விரும்பி வந்திறங்கியதை ஒத்துத் தோன்றிற்று
அக்காட்சி என்க.

(643)

 

சுயம்வர மாளிகை எடுத்தல்

1774. சிகைமணி யழுத்திய செம்பொற் சென்னிய
நகைமணிக் கோபுர வாயி னான்கொடு
வகைமணித் தலத்ததோர் மதலை மாளிகை
தொகைமணித் தொழில்பல தொடரத் தோற்றினார
 
     இதுமுதல் 9 செய்யுள் ஒரு தொடர்

     (இ - ள்.) சிகை மணி அழுத்திய செம்பொன் சென்னிய - முடியின்கண் மணிகள்
பதிக்கப்பட்ட செவ்விய பொன்னாலியன்ற தலைகளையுடைய, நகை மணிக் கோபுர வாயில்
நான் கொடு - திகழ்கின்ற அழகிய கோபுரவாயில்கள் நான்குடைத்தாய், வகை மணித்
தலத்ததோர் மதலை மாளிகை - ஒன்பான் வகை மணிகளானும் தளமிடப்பட்டதொரு
துணை மாளிகையை, தொகை மணித் தொழில்பல தொடர - தொகுக்கப்பட்ட
மணித்தொழில் திறம் பல நிரல்படும்படி, தோற்றினார் - புதுவதாக அமைக்கலாயினர்,
 (எ - று.)

     மதலைமாளிகை - ஈண்டு சிறப்பின்பொருட்டு இயற்றும் துணை மாளிகை என்க. மதலை, தூணுமாம்.

     சோதிமாலையின் சுயம்வரம் நிகழ்த்துதற் பொருட்கு மணியழுத்திய செம்பொற்
கோபுரங்களை யுடையதாய்த் தளமிடப்பட்ட மதலை மாளிகை புதுவதாகத் தோற்றுவித்தனர்
என்க.    

(644) 

 
1775. பளிங்கியல் பலகையும் பவழத் தூண்களும்
விளங்குபொற் கலங்களும் வெள்ளி வேயுளும்
இளங்கதிர் முத்தமு மியற்றி யின்னணம்
வளங்கவின் றனையதம் மதலை மாடமே.