பக்கம் : 1099
 

      (இ - ள்.) அங்கு அதற்கு ஐந்து கோல் அளவின் - அவ்விடத்தே அவ்
வேதிகையினின்றும் ஐந்து கோல் தொலைவிடத்து, ஆடரங்கு இங்கு வந்து
இறுத்தனவென்னும் ஈட்டன - அரம்பையர் ஆடும் அரங்கு, இவ்விடத்தே இறங்கி வந்து
தங்கின வென்று கூறும்படி பெருமை யுடையனவாய், செங்கதிர் பவழக்கால் நிரைத்த -
செவ்விய ஒளியுடைய பவழத் தூண்கள் நிரலாக நிறுத்தப்பட்டனவும், மங்கலச் செய்கைய -
அழகிய தொழிற்றிறன் அமைந்தனவும், மஞ்சு சூழ்ந்தவே - முகில்கள் தவழ்வனவும்,
(எ - று.)

     அவ் வேதிகையினின்றும் ஐந்துகோல் தொலைவின்கண் அரம்பையர் ஆடரங்கு
போன்றனவும் பவழக்கால் நிரைத்தனவும் மங்கலச் செய்கை செய்தனவும்
மஞ்சுசூழ்ந்தனவுமாய் என்க. (1781) சயமர மாளிகைகள் இயற்றி என முடித்திடுக.

(647)

 
1778. விளிம்பிடை மரகர வேதி கட்டிய
வளம்பெறு மணிநகை 1மஞ்ச மீமிசை
இளம்பெருஞ் சுரியுளை யரிதின் றேந்திய
உளம்பொலி யாசன முயர விட்டவே.
 
     (இ - ள்.) விளிம்பிடை - ஓரங்களிலே, மரகத வேதி கட்டிய - மரகத மணிகளாற்
றிண்ணைகள் அமைத்தனவும், வளம்பெறு மணிநகை மஞ்சம் மீமிசை - வளமிக்க மணிகள்
திகழ்கின்ற கட்டில் மேல், இளம் பெரும் சுரியுளை அரிநின்று ஏந்திய - இளமையுடையதும்
பருத்ததும் சுருண்ட பிடரி மயிரையுடையதுமாகிய அரிமான் நின்று தாங்குகின்ற, உளம்
பொலி ஆசனம் உயரவிட்டது ஏ- உள்ளம் மகிழ்ச்சியாற் பொலிவதற்குக் காரணமான
அரியணைகள் உயர்ந்து விளங்கும்படி இடப்பட்டனவும், (எ - று.)

     மரகத வேதி கட்டப்பட்டனவும், மஞ்சமீமிசை அரிநின்றேந்திய ஆசனங்கள்
உயரவிட்டனவாய் என்க.

(648)

 
 
1779. மண்டங்கு மகரவா சனத்து மென்மயில்
கண்டங்கள் புரைவன கனபொற் கொட்டைய
அண்டங்கொ ளன்னமென் றூவி யார்த்தன
எண்டங்கு மணியன வியற்றப் பட்டவே.
 
     (இ - ள்.) மண்டங்கும் மகரவாசனத்தும் - மண்ணிடத்தே தங்குதலையுடைய மகரமீன்
வடிவினவாய்ச் செய்த ஆசனங்களும், மென்மயில் கண்டங்கள் புரைவன - மென்மையுடைய
மயிலின் கழுத்துக்களை ஒப்ப, கனபொற் கொட்டைய - கனவிய பொன்னாலியன்ற
கொட்டைகளை யுடையனவும், அண்டங்கொள் அன்ன மென்தூவி ஆர்த்தன -
முட்டைகளைக் கொண்ட அன்னப் பறவைகளின் மெல்லிய தூவிகள் செறிக்கப்பட்டனவும்,
எண்தங்கு மணியன - உள்ளம் சென்று பதிவதற்குரிய மணிகள் பதிக்கப்பட்டனவும் ஆக,
இயற்றப்பட்ட - அமைக்கப்பட்டன,(எ - று.)
 

     (பாடம்) 1 வஞ்ச.