பக்கம் : 1100 | | அரிதின் றேந்திய அணைகளே அன்றி மகரவாசனங்களும் மயிற் கழுத்தை ஒப்பனவும் கொட்டைகளை யுடையனவும் தூவி ஆர்த்தனவும் மணியனவுமாய் இயற்றப்பட்டனவாய் என்க. | (649) | | | 1780. | வாரித்தண் கதிர்மணி முத்த மாலையும் பாரித்த பளிங்கெழிற் 1பழித்த கோவையும் பூரித்த பொழிகதிர்ப் பொன்செய் தாமமும் வேரித்தண் பிணையலு மிடையப் 2பட்டவே. | (இ - ள்.) வாரித் தண் கதிர் மணி முத்தம் மாலையும் - கடலிடத்தே தோன்றிய குளிர்ந்த ஒளியுடைய மணியாகிய முத்துக்களால் இயன்ற மாலைகளும், பாரித்த பளிங்கு எழில் பழுத்த கோவையும் - பருத்த பளிங்காலியன்ற அழகு முதிர்ந்த மாலைகளும், பொழிகதிர் பூரித்த பொன் செய்மாலையும் - பொழிகின்ற கதிர் நிறைந்த பொன்னாலியன்ற மாலைகளும், வேரித் தண் பிணையலும் - மணமிக்க குளிர்ந்த மலர்மாலைகளும், மிடையப்பட்டவே - செறிக்கப்பட்டன, (எ - று.) முத்தமாலையும், கோவையும் தாமமும் பிணையலும் மிடையப்பட்டனவாய் என்க. | (650) | | 1781. | மஞ்சுடை மாளிகை மிடைம ணித்தலம் பஞ்சுடைத் தவிசுகள் பரப்பிப் பூவடுத் தஞ்சுட ரிடுபுகை 3யடர்ந்தெ ழுந்தரோ வெஞ்சுடர்க் கடவுளை விருந்து செய்தவே. | (இ - ள்.) மஞ்சுடை மாளிகை மணி மிடை தலம் - முகில் தவழுகின்ற மாளிகையின் மணிகள் செறிந்த உள்ளிடம், பஞ்சுடைத் தவிசுகள் பரப்பி - பஞ்சாலியன்ற அணைகளைப் பரப்பி, பூவடுத்து - மலர்கள் தூவி, அஞ்சுடர் இடுபுகை அடர்ந்து எழுந்து - அழகிய நெருப்பின்கண் அகில் முதலியவற்றை இட்டெழீ இய மணப்புகையைச் செறியப் புகைத்து, வெஞ்சுடர் கடவுளை வெவ்விய ஞாயிற்றுக் கடவுளை, விருந்து செய்தவே - பூசனை செய்தனவாய், (எ - று.) தலம் பரப்பி அடுத்து எழீஇக் கடவுளை விருந்து செய்த என்க. கடவுளை விருந்து செய்தலாவது, பூசனை செய்தல். | (651) | (பாடம்) 1 பளித்த. 2 பட்டதே. 3தவழ்ந்தெ. | | |
|
|