மங்கல நாழிகை வந்தது. மன்னர் சுயம்வர மண்டபத்தே வருக என்று அறிவித்தவுடன் சங்கொலி பரந்தன. முரசு ஒலித்தெழுந்தன. அரசர் தோன்றினார் என்க. |
(653) |
|
அயோத்தி அரசன் வருகை |
வேறு |
1784. | எரிமணி வயிரப் பூணா னிக்குவா குலத்துட் டோன்றி அருமணிப் புரிசை வேலி யயோத்தியாள் கின்ற வேந்தன் திருமணி நிழற்றுஞ் செம்பொன் னெடுமுடி திருவில் வீசப் புரிமணி யாரந் தாழப் பொன்னகர் பொலியப் புக்கான். |
(இ - ள்.) எரிமணி வயிரப் பூணான் - சுடருகின்ற வயிர மணி அணிகலனைப் பூண்டவனும், இக்குவா குலத்துட்டோன்றி - பெருமைமிக்க இக்குவாகுவின் நல்ல குலத்திலே பிறந்து, அருமணிப் புரிசை வேலி அயோத்தி ஆள்கின்ற வேந்தன் - பெறற் கரும் மணிகள் பதித்த மதிலை வேலியாகவுடைய அயோத்தி நகரத்தை ஆளுகின்றவனுமாகிய மன்னன், திருமணி நிழற்றும் செம்பொன் நெடு முடி திருவில் வீச - சிறந்த மணிகள் சுடருகின்ற செவ்விய பொன்னாலாகிய தனது நீண்ட முடிக்கலன் அழகிய ஒளியைப் பரப்பவும், புரிமணி ஆரந்தாழ - விருப்பத்தைத் தூண்டுதலை யுடைய முத்துமாலை தூங்கவும், பொன்னகர் - அழகிய அம்மண்டபம், பொலியப் புக்கான் - பொலிவுறும்படி வந்து புகுந்தான், (எ - று.) அம் மண்டபத்தே அயோத்தி வேந்தன் நெடுமுடி திருவில் வீச ஆரந்தாழ அது பொலியப் புக்கான் என்க. இக்குவாகு குலம் ஐம்பெருங்குலங்களுள் ஒன்று. |
(654) |
|
அத்தினபுரத்தரசன் வருகை |
1785. | குழவியம் பரிதி போல்வான் குருகுலங் குளிரத் தோன்றி அழுவநீர்ப் புரிசை வேலி யத்தின புரம தாள்வான் முழவங்க ளிரண்டு செம்பொன் முளைக்கதிர்க் கனக வல்லி தழுவிய தனைய தோளான் றன்னொளி தயங்கச் சார்ந்தான். |
(இ - ள்.) குருகுலம் குளிரத் தோன்றி - குருகுலத்தின் கண் உலகம் மகிழும்படி பிறந்து, குழவி அம் பரிதி போல்வான் - இளைய ஞாயிற்றுமண்டிலம் போன்று திகழ்கின்றவனும், அழுவம் நீர் புரிசை வேலி - ஆழிய அகழியையும் மதில்களையும் வேலியாகவுடைய, அத்தினபுரமது |
|
|
|