பக்கம் : 1106 | | | வம்பெறி வளாகஞ் செம்பொன் மஞ்சங்கண் மலிர வேறி வெம்பறி விளங்குந் தானை வேலவர் விளங்கு கின்றார். | (இ - ள்.) ஐம்பெருங் குலத்தராய அரசரும் - இக்குவாகு குலம் முதலிய ஐந்து பெருங்குலங்களுட் டோன்றியவராய அரசரும், பிறரும் - அவ்வரச ரல்லாத ஏனையோரும்,. கம்பு ஏறி களி நல் யானை கடற்படை புறத்ததாக - கட்டுந் தூணை முறிக்கும் மதக்களிப்புடைய நல்ல யானை முதலிய நால்வகைப்பட்ட கடல் போன்ற தத்தம் படைகளை நகர்ப்புறத்தே வைத்து, வம்பு எறி வளாகம் செம்பொன் மஞ்சங்கள் மலிரவேறி - மணங்கமழும் வட்ட வடிவினவாய ஆதனங்கள் திகழும்படி வீற்றிருந்து, வெம்பரி விளங்கும் தானை வேலவர் - வெவ்விய புரவிகளால் விளக்கமுறுகின்ற படையையுடைய அவ்வேந்தர்கள், விளங்குகின்றார் - திகழ்ந்தனர், (எ - று.) ஐம்பெருங்குலமாவன : - இக்குவாகுமரபு, அரிமரபு, நாதமரபு, குருமரபு, உக்கிரமரபு, என்பன. இவ்வாறு ஐம்பெருங்குலத்து வேந்தரும் பிறவேந்தரும் படைபுறத்தவாக, மஞ்சங்கள் மலிர ஏறி விளங்குகின்றார் என்க. | (660) | | அமிததேசன் வருகை | 1791. | திருந்திய திலதக் கண்ணித் தேவிளங் குமரன் போலும் அருந்தகை யரச நம்பி யடுதிற 1லமித தேசன் பரந்தபின் பசலை கூரப் பனிக்கதிர் வருவ தேபோல் விரிந்தொளி சுடர வேந்தர் விளங்கொளி மழுங்கச் சென்றான். | (இ - ள்.) திருந்திய திலதம் கண்ணி - திருத்திப் புனையப்பட்ட உயரிய முடிமலர் மாலையையுடைய, தேவிளங் குமரன் போலும் - கடவுளாகிய முருகனைப் போன்ற, அருந்தகை அரச நம்பி - அரிய தகுதியையுடைய அரசனாகிய, அடுதிறல் அமிததேசன் - வெல்லும் ஆற்றல்மிக்க அமிததேசன் என்பான், பரந்த பனி பசலைகூர - பரவிய பனிப்படலம் நிறங்குன்றும்படி, பின்கதிர் வருவதே போல் - அதன் பின்னர்த் தாய் ஞாயிறு தோன்றினாற்போல, விரிந்து ஒளிசுடர - ஒளிபரவித் திகழவும், வேந்தர் விளங்கு ஒளி மழுங்கச் சென்றான் - மன்னர்கள் விளங்குதற்குக் காரணமான தம்மொளி மழுங்குமாறும் செல்லலானான், (எ - று.) கடவுளாகிய முருகனை ஒத்த அரச நம்பி அமிததேசன் பனிப்படலம் பசலைபாய ஞாயிறு தோன்றினாற் போலே, தன் ஒளிசுடர வேந்தர் ஒளி மழுங்கச் சென்றான் என்க. | (661) | |
| (பாடம்) 1 லமுத. | | |
|
|