பக்கம் : 1107
 
 
1792. மழைபுரை மதத்த தாய மழகளி யானை தன்மேல்
வழைவளர் சோலை சேர்ந்த மணிவண்டு மறிவ வேபோல்
எழுதெழி லழகன் றன்மே லிளையவர் கருங்கண் வீழ்ந்து
1விழவயர் நகரின் வந்த வேந்தரை விட்ட வன்றே.
 
     (இ -ள்.) வழைவளர் சோலை சேர்ந்த - சுரபுன்னை மரங்கள் செழித்து வளர்ந்துள்ள
பொழிலினிடத்தே சேர்ந்த, மணிவண்டு - நீலமணி போன்ற வண்டுகள் அதனை ஒழித்து,
மழைபுரை மதத்த தாய மழ களி யானை தன்மேல் மறிவவே போல் - மழைபோன்று
மிக்குப் பொழியும் மதநீரையுடைய இளைமைத்தாகிய மதக்களிப்புடைய யானையின்பால்
மீண்டு வந்து மொய்த்தனவற்றை ஒப்ப, இளையவர் கருங்கண் - இள மகளிருடைய கரிய
கண்கள், விழவயர் நகரின் வந்த வேந்தரை விட்ட - சுயம்வர விழா நிகழ்கின்ற
மண்டபத்தே வந்த அரசர் கண்மேல் வீழ்வதைவிட் டொழிந்தனவாய், எழுது எழில்
அழகன் றன்மேல் வீழ்ந்த - ஓவியத்தே வரைதற்குரிய மிக்க அழகினையுடைய
அமிததேசன் மேல் வீழ்ந்தன, அன்றே ; அசை, (எ - று.)

     ஏனைய வேந்தர் அழகு சோலைமலர் தரும் தேன்போன்று சிறுமையுடைத்தாய் ஒழிய
அமிததேசன் அழகு யானை மதம்போன்று மிக்குப் பொழிதலின் மகளிர் கண் அவற்றை
விட்டு இதன்பால் வீழ்ந்தன என்க.

(662)

 

நம்பி,

1793. சோதிமாலையை அழைமின் எனல்
வரைசெறிந் தனைய செம்பொன்
மஞ்சங்கண் மலிரத் தோன்றி
அரைசர்க ளிருந்த போழ்தி
னாழியந் தடக்கை வேந்தன்
விரைசெறி குழலங் கூந்தன்
மெல்லியல் வருக வென்றான்
முரைசொலி கலந்த சங்கு
வயிரொடு முரன்ற வன்றே.
 
     (இ - ள்.) வரை செறிந்தனைய - மலைகள் நெருங்கினாற் போன்ற, செம்பொன்
மஞ்சங்கள் - செவ்விய பொன்னாலியன்ற இருக்கைகள், மலிரத் தோன்றி - விளங்கும்படி
அவற்றின்கண் ஏறி, அரைசர்கள் - மன்னர்கள்,

     இருந்த போழ்தில் - இராநின்ற அமயத்தே, ஆழியம் தடக்கை வேந்தன் -
ஆழியையுடைய பெரிய கையயையுடைய மன்னனாகிய திவிட்டன், விரை
 

     (பாடம்) 1 விழையவர்.