பக்கம் : 1108 | | செறி குழல் அங்கூந்தல் மெல்லியல் வருக என்றான் - மணம் நிறைந்த குழன்ற அழகிய கூந்தலையுடைய மெல்லியல்புடைய சோதிமாலை இம்மண்டபத்திற்கு வரக்கடவள் என்று பணித்தானாக, முரைசொலி சங்குவயிரொடு கலந்து முரன்ற - அப்பொழுது முரச முழக்கமும் சங்கு கொம்பு இவற்றின் முழக்கமும் விரவி முழங்கின, அன்றே: அசை, (எ - று.) மஞ்சங்கள் திகழுமாறு மன்னர்கள் ஏறி இருந்தபொழுதில் திவிட்ட நம்பி மெல்லியல் வருக என்றானாக; அவ்வழி முரச முதலியன முழங்கின என்க. | (663) | | வேறு | சோதிமாலை சுயம்வர மண்டபம் எய்துதல் | 1794. | மன்னவன் மடந்தைமணி மாடநிலை யுள்ளால் பொன்னமளி 1மேனளிய பொங்கணையின் மேலாட் (கு) கன்னமனை யாரடிக ளாரருளி தென்றார் இன்னகைய பூந்தவிசி னின்றினி திழிந்தாள். | (இ - ள்.) மன்னவன் மடந்தை - திவிட்ட மன்னனின் மகளாகிய, மாடநிலை யுள்ளால் - மேனிலைமாடத்தின் அகத்தே, பொன் அமளிமேல் - பொன்னாலியன்ற கட்டிலின்மேல், நளிய பொங்கு அணையின் மேலாட்கு - மலர்செறிந்துயர்ந்த பூவணையின் மேல் வீற்றிருந்த சோதிமாலைக்கு, அன்னம் அனையார் - அன்னப் பறவை போன்ற உழைக்கல மகளிர்கள், இது அடிகளார் அருள் என்றார் - இப்பணி திவிட்டமன்னருடைய அருள் என்று கூறினராக, இன் நகைய பூந்தவிசினின்று இனிதின் இழிந்தாள் - அதுகேட்ட சோதிமாலை இனிதின் விளங்குகின்ற மலரணையினின்றும் மெல்ல இறங்கினாள், (எ - று.) இது என்றது நம்பி “மெல்லியல் வருகÓ என்றதனை, மேன் மாடத்தே பொன் அமளிமேல் பொங்கணையில் இனிதிருந்த சோதி மாலைக்கு, அன்னமனையார், இஃது அடிகள் அருள் என்றார், அவளும் பூந்தவிசினின்றும் இனிதின் இழிந்தான் என்க. | (664) | | இதுவுமது | 1795. | வஞ்சியனை யார்மணி தொடர்ந்தசுடர் ஞாணால் அஞ்சிலவி ருங்குழ லசைத்தயில் பிடித்தார் கஞ்சுக முகத்தமுலை 2கச்சுமிக வீக்கி மஞ்சிவரு 3மாமயி லனார்மருங்கு சூழ்ந்தார். | |
| (பாடம்) 1 மேலடுத்த. 2 கச்சுமுகம். 2 மாமயிலி | | |
|
|