பக்கம் : 1113
 

சோதிமாலைக்குத் தோழி அரசரைச் சுட்டிக்காட்டி
வரலாறியம்பல்

1801. வடியரத்த மிடைவழித்துக் கருங்கண்ணுஞ்
     செம்பொன்னால் வளைத்த சூரல்
கொடியரத்த மெல்விரலாற் கொண்டரசர்
     குலவரவு கொழிக்கு நீராள்,
முடியரக்குப் பூங்கண்ணி மூரித்தேர்
     1வேந்தர்தமை முறையாக் காட்டிப்
படியரக்கும் 2பாவைக்குப் பைபையவே
     3யினையமொழி பகரா நின்றாள்.
 
     (இ - ள்.) வடி அரத்தம் இடைவழித்து - உருகிவடியும் செவ்வரக்கினால் மேற்புறம்
வழிக்கப்பட்டு, கருங்கண்ணும் செம்பொன்னால் வளைத்த - கரிய கணுக்கள் தோறும்
செவ்விய பொற்பூண் செறிக்கப்பட்ட, சூரல் கொடி - பிரம்பினை, அரத்த மெல்விரலால்
கொண்டு - சிவந்த மெல்லிய தன் விரல்களாலே பற்றிக்கொண்டு, அரசர் குலவரவு
கொழிக்கும் நீராள் - மன்னர் மரபின் வரலாற்றினை நன்கு ஆராய்ந்தறிந்த தன்மையுடைய
தோழி ஒருத்தி, அரக்குப் பூங்கண்ணி முடிமூரித்தேர் வேந்தர் தமை - செம்மலர் தொடுத்த
மலர்மாலை வேய்ந்த முடிக்கலனையும் பெரிய தேரையும் உடைய வேந்தர்களை, முறையாக்
காட்டி - காட்டும் முறையானே காட்டி, படி அரக்கும் பாவைக்கு - நிலத்திலே இயங்கும்
பாவைபோன்ற சோதிமாலைக்கு, பைபையவே - மெல்ல மெல்ல, இனையமொழி
பகராநின்றாள் - இன்னோரன்ன மொழிகளையும் இயம்புவாளாயினாள்,
(எ - று.)

     அரக்குதல் - இயங்குதல். பாவை - கொல்லிப்பாவையுமாம். சூரல் - பிரம்பு.
அரக்கு வழித்துக் கணுக்கடோறும் செம்பொன் பூணிட்ட பிரம்பினை விரலாலே பற்றினாள்
ஒரு தோழி. பாவைக்கு வேந்தர்தமை முறையாகக் காட்டுபவள் இவ்வாறு கூறினாள் என்க.

     குலவரவு கொழிக்கும் நீராள் என்றார், மன்னர் குல வரலாற்றை நன்கு ஆராய்ந்தவள்
என்பது தேன்ற. கொழித்தல் - ஆராய்தல்.

(671)

 

இவன் இக்குவாகுலத்து இளங்கோ எனல்

1802. அங்கார வலர்கதிர மணிசுடரு
     மரியணைமே லமர்ந்து தோன்றித்
4தங்கார மணிநிழற்றுந் 5தடவரையா
     ரகலத்தான் றகர நாறும்
 

     (பாடம்) 1 வேந்தரை. 2 பாவைக்குப் பையவே. 3 யினையன. 4துங்கார.

     5 தடவரை யகலத்தன்றகர.