பக்கம் : 1114 | | | கொங்கார வார்குழலார் குவிமுலைகண் முகம்பொருத குவவுத் தோளான் இங்காரு நிகரில்லா விக்குவா குலத்திறைவ னிருந்த கோவே. | (இ - ள்.) ஆங்கு அலர் கதிர ஆரமணி சுடரும் - அவ்விடத்தே விரிந்த ஒளியுடைய முத்துமாலை ஒளிவீசாநின்ற, அரியணைமேல் அமர்ந்து தோன்றி - சிம்மாசனத்தின் மேலே வீற்றிருந்து விளங்கி, நிழற்றும் மணி ஆரம் தங்கு தடவரை ஆர் அகலத்தான் - மிளிருகின்ற மணிவடம் கிடந்த பெரிய மலை போலும் மார்பையுடையவனும், தகரம் நாறும் வார்குழலார் - மயிர்ச்சாந்து கமழும் நீண்ட அளகத்தையுடைய மகளிர்களின், கொங்கு ஆர குவி முலை கண்முகம் பொருத - மணமுடைய சந்தனந் திமிர்ந்த குவிந்த முலைகளின் கண்ணையுடைய குவடுகள் உழுத, குவவுத்தோளான் - திரண்ட தோள்களையுடையனுமாய், இருந்த கோ - இருக்கின்ற வேந்தன், இங்கு யாரும் நிகர் இல்லா இக்குவா குலத்து இறைவன் - இவ்விடத்தே யாரும் தனக்கு ஒப்பாரிலாத இக்குவாகு மரபிற்றோன்றி மன்னன்காண்! (எ - று.) அங்கு அரியணைமேல் அமர்ந்து தோன்றி நிழற்றுந் தடவரை அகலத்தான், நிகரில்லா இக்குவா குலத்திறைவன் கோ என்றாள் என்க. | (672) | | இதுவுமது | 1803. | ஆதியா னருளாழி தாங்கினா னாயிரச்செங் கதிரோ 1னாணும் சோதியான் சுரர்வணங்கு திருவடியான் சுடுநீறா நினையப் பட்ட, காதியா னரு 2ளியபொற் கதிர் 3கொண்முடி கவித்தாண்டார் மருகன் கண்டாய் ஓதியான் மொழி 4யினிவ னுறுவலிக்கு நிகராவா ருளரோ வேந்தர். | (இ - ள்.) ஆதியான் - ஆதிபகவனும், அருள் ஆழி தாங்கினான் - தருமசக்கரத்தைத் தாங்கியவனும், ஆயிரச் செங்கதிரோன் நாணும் - ஆயிரம் சிவந்த கதிரோடு கூடிய ஞாயிறும் நாணுதற்குக் காரணமான, சோதியான் - ஒளிவடிவமுடையவனும், சுரர்வணங்கு திருவடியான் - தேவர்களாலே வணங்கப்பட்ட திருவடிகளை யுடையவனும், நினைய சுடுநீறாப்பட்ட - | |
| (பாடம்) 1 னாணும். 2 னருளிய கதிர்முடி. 3 மொழியினவ.் 4 வுறுவலிக்கு | | |
|
|