பக்கம் : 1115
 

     நினைத்த மாத்திரையானே சுடப்பட்ட நீறுபோலே அழிந்த, காதியான் - காதிகன்
மங்களையுடையவனுமாகிய விருஷப தீர்த்தங்கரரால், அருளிய பொற்கதிர்கொள் முடிகவித்து - அருளப்பட்ட பொன்னாலியன்ற சுடர்முடி சூட்டிக்கொண்டு, ஆண்டார் மருகன் கண்டாய்
- இவ்வுலகத்தை ஆண்ட சிறந்த மன்னர்களின் மரபில் தோன்றியவன், ஓதியான்
மொழியின் - இவன் பெருமையை யான் எடுத்துக் கூறுமிடத்து, இவன் உறுவலிக்கு -
இவனுடைய பேராற்றலுக்கு, வேந்தர் நிகர் ஆவார் உளரோ - வேந்தர்களுக்குள் ஒப்பான
வலியுடையார் உளரேயோ (இல்லை என்றபடி) (எ - று.)

     பட்ட காதியான் என்பதை அருங்கேடன் என்பதுபோலக்கொள்க. காதி கன்மங்கள்
என்பன: உயிரின் இயற்கைப் பண்பினை மறைக்கும் கன்மங்களாம். அவை ஞானாவரணீயம்,
தரிசனாவரணீயம், மோகநீயம் அந்தராயம் என நான்காம்.

     இக்குவாகு மரபினனாகிய, பரதசக்கரவர்த்தி, விருஷப தீர்த்தங்கரருடைய திருமகன்
ஆதலின், “பட்டகாதியான் அருளிய பொற் கதிர்முடிÓ யென்றார்,

(673)

 

இதுவுமது

1804 ஆழித்தே ரொன்றேறி யலைகடலி
     னடுவோட்டி 1யமரார் தந்த
மாழைத்தேர் மருங்கறா மணிமுடியு
     2மணிகலமுந் திறையா வவ்வி,
ஊழித்தே ரரசிறைஞ்ச வுலகெலா
     மொருகுடைக்கீ ழுறங்கக் காத்த,
பாழித்தோட் பரதன்பி 3னிவனிவனா
     னிலமடந்தை பரிவு தீர்ந்தாள்.
 
     (இ - ள்.) ஆழித்தேர் ஒன்று ஏறி - உருள்களையுடைய ஒப்பற்ற தேரில் ஏறி,
அலைகடலின் நடு ஒட்டி - அலையையுடைய கடலின் நடுவே அதனைச் செலுத்தி,
மாழைத்தேர் - பொன்னாலியன்ற தேர்களையும், மணிமுடியும் - மணிகளாலியன்ற
முடியணிகலன்களையும், அணிகலமும் -பிற அணிகலன்களையும், மருங்கு அறா - தன்
பக்கத்தே ஒழியாதே, தேர் அரசு ஊழி இறைஞ்ச - தேரையுடைய பகை மன்னர்கள்
முறையே வணங்கா நிற்ப, திறையா வவ்வி - அவற்றை இறைப் பொருளாகக் கவர்ந்து
உலகெலாம் -
 

     (பாடம்) 1 யமரர். 2 மணிக்கலமு. 3 னிவனாலிந் நில மடந்தை.