பக்கம் : 1116 | | இவ்வுலகமனைத்தும், ஒரு குடைக்கீழ் - தனது ஒரே குடை நீழலிலே, உறங்கக் காத்த - இனிதே உறங்கும்படி காவல் செய்த, பாழித்தோள் பரதன்பின் இவன் - வலிய தோள்களையுடைய பரதமன்னன் மரபினனாவான் இம்மன்னவன், இவனால் நிலமடந்தை பரிவு தீர்ந்தாள் - இவனது ஆட்சி நன்மையானே நிலமகள் இன்னல் தீர்ந்து இனிதின் வைகுவாளாயினள், (எ - று,) தனது ஒரே தேரை அலைகடலின் நடுவே ஓட்டிப் பகைவர்கள் கொடுத்த பொற்றேர் முதலியவற்றைத் திறையாகப் பெற்று அவர் முறைமுறை இறைஞ்ச உலகெலாம் ஒருகுடைக்கீழ் உறங்கக் காத்த பரதசக்கரவர்த்தியின் வழித்தோன்றல் இவனெனக் குல நன்மை கூறினாள், என்க. | (674) | | | குருகுலக் கோமகன் மாண்பு | 1805. | இன்னவன துயர்குலமு மிளமையுமிங் 1கிவன்வடிவுஞ் சொல்ல வேண்டா 2மன்னவன்றன் மடமகளே 3மற்றிவனுக் கிடமருங்கின் மஞ்சஞ் சேர்ந்து 4பொன்னவிரு மணியணைமேற் 5பொழிகதிரீண் டெழுந்ததுபோற் பொலிந்து தோன்றுங் கொன்னவின்ற வேற்குமரன் குருகுலத்தார் 6கோனிவனே கூறக் கேளாய். | (இ - ள்.) இன்னவனது உயர்குலமும் இளமையும் இங்கு இவன் வடிவும் சொல்லவேண்டா - இப்பரதன் மரபினனாகிய மன்னனுடைய உயர்ந்த குலப்பெருமையையும், இவன் இளமை நலத்தினையும் அழகின் சிறப்பையும் இவ்விடத்தே இனி யான் கூறிக்காட்ட வேண்டா, மன்னவன்றன் மடமகளே - அரசன் மகளாகிய சோதிமாலாய், மற்றிவனுக்கு இடமருங்கின் மஞ்சம் சேர்ந்து - இம்மன்னனுக்கு இடப்பாகத்தே இடப்பட்ட இருக்கையின் மேலமைந்த, பொன் அவிரும் மணியணைமேல் - அழகு விரியும் மணிகளிழைத்த பஞ்சணையின் மேலே, பொழிகதிர் ஈண்டு எழுந்ததுபோல் பொலிந்து தோன்றும் - பொழிகின்ற சுடருடைய கதிரவனே இவ்விட,த்தே எழுந்தருளினாற் போன்று விளங்கித் தோன்றாநின்ற, கொல் நவின்ற வேல்குமரன் - கொலைத்தொழிலமைந்த வேலையுடைய இளமன்னன், கூறக்கேளாய் - யார் என யான் இயம்புவேன் கேள், இவனே குரு குலத்தார் கோன் - இவன் குருமரபிற்றோன்றிய மன்னன் ஆவான், (எ - று.) | |
| (பாடம்) 1 மிவன் வடிவும். 2 மன்னன். 3 மற்றிவற், மற்றுமிவற். 4 பொன்னவிர். 5 பொழிகதிர். 6 கோனிவனைக். | | |
|
|