பக்கம் : 1117
 

     இவன் பெருமை உலகறிந்ததாகலின் கூறவேண்டா என்றாள், என்க.
மன்னவன்றன் மடமகளே! இன்னவனை இனி யான் கூறவேண்டா, இவன் இடமருங்கே
மஞ்சஞ் சேர்ந்து பொலிந்து தோன்றும் வேற் குமரன், குருகுலத்தார்கோன் கூறக் கேளாய்
என்றாள் என்க.

(675)

 

இதுவுமது

1806. அருளாழி யறவரச னருளினா
     லகன்ஞாலம் பரிவு தீர்த்தான்,
உருளாழி யுடையரிவ னடைவின்மிகக்
     கடைப்பணிகொண் டுழையோர் போல
இருளாழி நிழற்றுளும்பு 1மெரிபொன்மணி
     நெடுமுடிசாய்த் திறைஞ்சப் பட்டான்,
மருளாழுங் கழிவனப்பின் மற் 2றிவனே
     குலமுதற்கண் வயவோன் கண்டாய்.
 
     (இ - ள்.) அருள் ஆழி அற அரசன் அருளினால் - அருட்கடலாகியவனும் அறம்
உரைத்த வேந்தனும் ஆகிய அருகக் கடவுளின் அருள் வழி நின்று, அகல் ஞாலம் பரிவு
தீர்த்தான் - விரிந்த வுலகத்தின் இன்னல்களை அகற்றியவன், உருள் ஆழியுடையவர் -
ஆணை உருளையையுடைய அரசர்கள், இவன் அடைவின் - இம்மன்னவனை அடைதல்
செய்யுங்கால், மிகக் கடைப்பணி கொண்டு - மிக்க எளிய பணிகளையும் இவன் ஏவின்
ஏற்றுக் கொண்டு, உழையோர் போல - இவன் ஏவலரைப்போன்று, இருள் ஆழி நிழல்
துளும்பும் - இருண்ட நிலவட்டத்தே ஒளியைப் பரப்புகின்ற, எரிபொன்மணி நெடுமுடி
சாய்த்து - சுடருடைய பொன்னாலியன்ற தம் மணியையுடைய நெடிய முடியைத் தாழ்த்தி,
இறைஞ்சப்பட்டான் - வணங்கப்பெற்றவன், மற்றிவனே குலமுதற்கண் வயவோன் - இவனே
உயர்குலத்தின் முதல்வர்களிலே சிறந்த ஆற்றலுடையான், கண்டாய்: முன்னிலையசை,   
(எ - று.) 

     அடைவு - அடைதல்.

     குருகுல மன்னனாகிய இவன், அறவாழியந்தணன் அருளிய அறநெறி பிறழாது நின்று
ஞாலம் பரிவு தீர்த்தான்; உருளாழிமன்னர் இவன் உழையோர்போல நெடுமுடி
சாய்த்திறைஞ்சப்பட்டான். இவன் குலமுதற்கண் வயவோன், என்றாள் என்க.

(676)

 

      (பாடம்) 1 மெரிமணி. 2 மற்றிவன்.