பக்கம் : 1118
 

இதுவுமது

1807. 1சூழிருந்திண் கடற்றானை யுடன்றுளங்கச்
     சுரர்கொணர்ந்து சொரிந்த மாரித்
தாழிரும்பல் புயறாங்கிச் சரகூடஞ்
     சந்தித்த தகையோ னன்னோன்
யாழிரங்கு மணிவண்டு மிலங்கிழையார்
     கருங்கண்ணு மருங்கு நீங்கா
வீழிரும்பொற் சுடரார வரைமார்ப2
     னிவன்சீர்யான் விளம்ப வேண்டா.
 
     (இ - ள்.) சூழ் இரும்திண் கடல் தானை உடன் துளங்க - தம்மைச் சூழ்ந்து வந்த
பெரிய திண்ணிய கடல் போன்ற படைகள் உடனே நடுங்குமாறு, சுரர்கொணர்ந்து சொரிந்த
- வானவர்களாலே கொண்டு வந்து பொழியப்பட்ட, தாழ் இரும்பல் புயல் மாரி தாங்கி -
தாழ்தலையுடைய பெரிய பலவாகிய முகில்களின் மழையைத் தாங்கும்படி, சரகூடம் சந்தித்த
தகையோன் அன்னோன் - அம்புகளாலே மண்டபமமைத்த பெருமையுடைய அருச்சுனனை
ஒத்தவனும், யாழ் இரங்கு மணி வண்டும் இலங்கு இழையார் கருங்கண்ணும் - யாழ்
போன்று பாடும் நீலமணி போன்ற வண்டுகளும் திகழ்கின்ற அணிகலன்களையுடைய
மகளிர்களின் கரிய கண்களும், மருங்கு நீங்கா - அயலிலே மொய்த்தலைத் தவிராத, வீழ்
இரும் பொன் சுடர் ஆர வரைமார்பன் - விரும்புதற்குரிய பெரிய பொற்கலன்கள்
ஒளிருகின்ற மணிவடம் பூண்ட மலையை ஒத்த மார்பையுடையோனுமாகிய, இவன் -
இவ்விள மன்னனுடைய, சீர் - பெருமையை, யான் விளம்ப வேண்டா - (இப்பேருலகம்
நன்கு அறிந்தனவேயாகலின்) யான் இனிக் கூறவேண்டாவன்றே, (எ - று.)

     தகையோன் - ஈண்டு அருச்சுனன்.

     இவன் கடற்றானை துளங்கச் சுரர் சொரிந்த மழைப்புயல் தாங்கிச் சரகூடஞ் சந்தித்த
அருச்சுனனை ஒத்தவன். வண்டும், மகளிர் கருங்கண்ணும் மருங்கு நீங்கா. இவன்சீர் யான்
விளம்ப வேண்டா என்றாள், என்க.

(677)

 

உக்கிர மரபு மன்னன் உயர்வு உரைத்தல்

1808. இங்கிவன திடமருங்கி னெழில் 3வயங்கு
     மணிமஞ்ச மிலங்க வேறிச்
சங்கிவர்வெண் சாமரையுந் தாழ்குழையு
     நீள்சுடருந் 4தயங்கி வீசக்
 

     (பாடம்) 1 சூழிருங் கடற்றானை. 2 வடிவேல் யான். 3எழின்றயங்கு 4 தயங்க.