பக்கம் : 1119 | | | குங்குமஞ்சேர் கொழும்பொடியிற் புரண்டுதன்னி னிறஞ்சிவந்த குளிர்முத் தாரம் செங்கதிரோ னொளிபருகுஞ் 1செவ்வரைதே ரகலத்தான் றிறமுங் கேளாய். | இ - ள்.) இங்கு இவனது இடமருங்கின் - இவ்விடத்தே இம் மன்னனுடைய இடப்பக்கத்தில், எழில் வயங்கு மணி மஞ்சம் இலங்கவேறி - அழகு திகழ்கின்ற மாணிக்கக்கட்டில் விளங்கும்படி ஏறியிருந்த, சங்கு இவர் வெண்சாமரையும் - சங்கை ஒத்த இயங்குதலையுடைய வெள்ளிய சாமரையும், தாழ் குழையும் - தூங்குகின்ற குண்டலங்களும், நீள்சுடரும் தயங்கி வீச - திருமேனியின் நீண்ட ஒளிகளும் திகழ்ந்து வீசா நிற்பவும், குங்குமம் சேர் கொழும் பொடியில் - குங்குமம் கலந்த கொழுவிய மணப்பொடியின்கண், புரண்டு தன் நிறம் சிவந்த - புரள்தலால் தன்னிறம் சிவப்பாக மாறிய, குளிர் முத்தாரம் - குளிர்ந்த முத்துமாலை, செங்கதிரோன் ஒளி பருகும் - கதிரவனுடைய ஒளியை விழுங்கா நின்ற, செவ்வரை நேர் அகலத்தான் - செம் பொன் மலையை ஒத்த மார்பினை யுடையவனாகிய இம்மன்னவனுடைய, திறமும் கேளாய் - பெருமையையும் இனிக் கூறக்கேள், (எ - று.) இம்மன்னனின் இடமருங்கே, மஞ்சமிலங்க ஏறி, வீச, குளிர் முத்தாரம் கதிரோன் ஒளி பருகும், அகலத்தான் திறமுங்கேள், என்றாள், என்க. | (678) | | இதுவுமது | 1809. | தகரநா றிருஞ்சோலைச் சயம்பூறான் றுறவரசாய் நின்ற காலை மகரயாழ் நரம்பியக்கி வரங்கொண்டு வடமலைமே லுலக மாண்ட சிகரமா லியானையான் வழிமருகன் செந்தாமந் தவழ்ந்து தீந்தேன் பகருமா மணிமுடியா 2னமரருமே பாராட்டும் படியன் பாவாய். | (இ - ள்.) தகரம் நாறு இருஞ்சோலை - தகரமலர் கமழும் பெரிய பொழிலின் கண்ணே, சயம்பூல்தான் - சயம்பூலி என்பவர், துறவரசாய் நின்றகாலை - தவத்தாற் சிறந்து துறவிகட்கு அரசாகத் திகழ்ந்த காலத்தே, | |
| (பாடம்) 1 செவ்வரை யகலத்தான். 2னமரரும். | | |
|
|