பக்கம் : 1120
 

     மகரயாழ் நரம்பியக்கி - தனது இசை நூல் வன்மையால் மகரயாழினது நரம்பை வருடி
இனிய இசைபாடி, வரங்கொண்டு - அம்முனிவனிடத்தே சிறந்த வரங்களைப் பெற்று,
வடமலைமேல் உலகம் ஆண்ட - இமயமலை மேலிருந்து உலகத்தை ஆட்சி செய்த,
சிகரமால் யானையான் - சிகரங்களை ஒத்த பெரிய யானைப்படையையுடைய மன்னனுடைய,
வழிமருகன் - மரபின் வழிவந்தவன், தீம் செந்தாமம் தவழ்ந்து தேன் பகரும் மாமணி
முடியான் - இனிய செவ்விய மலர் மாலைகளிலே ஊர்ந்து வண்டுகள் பாடுகின்ற சிறந்த
மணிகள் பதித்த முடியுடைய இம்மன்னன், அமரருமே பாராட்டும் படியன் - தேவர்களும்
புகழ்தற்குரிய உருவத்தையுடையவன் ஆவான், பாவாய் - சோதிமாலாய்!, (எ - று.)

     சயம்பூலி துறவரசாய் நின்ற காலை நரம்பியக்கி வரங்கொண்டு வடமலைமேலுலகம்
ஆண்ட யானையானாகிய உக்கிரவேந்தனின் மரபினன் அமரருமே பாராட்டும் அழகன்
இவன் என்றான் என்க.

(679)

 

இதுவுமது

1810. சக்கரர்தாம் பிறந்துவரித் தரங்கநீர்
     வளாகமெல்லாந் தங்கீழ்க் கொண்ட
உக்கிரமெய்க் குலத்தரச னொளிவேலிவ்
     1விளையனவ துருவே கண்டாய்
அக்கிரநற் பெருந்தேவி மடமகளே
     யரசணங்கு மணங்கே யின்னும்
விக்கிரமக் கடற்றானை விறல்வேந்த
     ரிவர்சிலரை விளம்பக் கேளாய்.
 
     (இ - ள்.) சக்கரர் தாம் பிறந்து - சக்கரவர்த்திகள் பலர் தோன்றி, உவரித் தரங்க நீர்
வளாகம் எல்லாம் - கடலினது அலையுடைய நீராற் சூழப்பட்ட நிலவட்டம் முழுவதையும்,
தம் கீழ்க் கொண்ட - தம்முடைய குடை நீழலிலே கொண்டு ஆண்ட, உக்கிர மெய்க்குலத்து
அரசன் - உக்கிர குலம் என்னும் உயரிய குலத்திலே பிறந்த மன்னன், ஒளிவேல்
இவ்விளையவனது - ஒளிமிக்க வேலையுடைய இவ்விள மன்னனுடைய, உருவே
கண்டாய் -எழிலை நீயே காண்கின்றனை, அக்கிரநற் பெருந்தேவி மடமகளே -
திவிட்டனுடைய முதன்மையான மனைவியாகிய சுயம்பிரபையின் செல்வியே, அரசு
அணங்கும் அணங்கே - அரசர்களை வருத்தும் தெய்வமகளே, இன்னும் - மேலும்,
விக்கிரமக் கடல்தானை - வீரச்செயலையுடைய கடல் போலும் படைகளையுடைய,
விறல்வேந்தர் இவர் சிலரை - வெற்றியையுடைய மன்னராகிய இவர்களிற் சிலர்
பெருமையை, விளம்பக் கேளாய் - கூறக்கேள், (எ - று.)
 

     (பாடம்) 1 விளைய வனுருவேல்.