பக்கம் : 1121
 

     சக்கரவர்த்திகள் பலர் தோன்றி உலகெலாம் தங்கீழ்க்கொண்ட உக்கிரநற்குலத்து
அரசன் இவன்; இவனுரு நீயே காண்டி; மடமகளே விறல்வேந்தராகிய இவர் சிலரை
விளம்புவல் கேள்! என்றாள் என்க.

(680)
 
நாதமரபின் நம்பி சிறப்பு
1811. ஏலஞ்செய் பைங்கொடியி னிணர்ததைத்து
     பொன்னறைமேற் கொழுந்தீன் றேறிக்
கோலஞ்சேர் வரைவேலிக் குண்டலத்தார்
     கோமானிக் கொலைவேற் காளை
ஞாலங்க ளுடன்பரவு 1நாதவன்றன்
     குலவிளக்கு நகைவே னம்பி
போலிங்க ணரசில்லை 2பொன்னார
     வரைமார்பன் பொலிவுங் காணாய்.
 
     (இ - ள்.) ஏலம் செய் - பஞ்சவாசங்களுள் ஒன்றாகிய ஏலம் செய்தற்குக் காரணமான,
பைங்கொடியின் - ஆஞ்சியினது பசிய கொடி, இன் இணர்ததைந்து - இனிய
பூங்கொத்துக்கள் செறியப்பெற்று, பொன்னறைமேல் - மலையினது அழகிய உச்சியின்மேல்,
கொழுந்து ஈன்று ஏறி - கொழுந்துவிட்டுப் படர்ந்து, கோலஞ்சேர் - அழகுறுத்தப்பட்ட,
வரைவேலிக் குண்டலத்தார் - மலைகள் வேலிபோற் சூழப்பட்ட குண்டல புரத்தாருடைய,
கோமான் இக்கொலை வேல் காளை - மன்னனாவான் இந்தக் கொலைத்தொழில் வல்ல
வேலேந்திய காளை போல்வான், ஞாலங்கள் உடன் பரவும் - உலகமனைத்தும் ஒருங்கே
புகழ்கின்ற, நாதவன்றன் குலவிளக்கு - நாதவகுலத்தை ஒளிரச்செய்யும் விளக்கை ஒப்பவன்,
நகைவேல் நம்பிபோல் இங்கண் அரசில்லை - இவ் விளங்கும் வேலுடைய நம்பியை ஒத்த
அரசர்கள் இவ்விடத்தே ஒருவரேனும் இலர், பொன் ஆர வரை மார்பன் பொலிவும்
காணாய் - பொன்மாலை பூண்ட மலைபோன்ற மார்பினையுடைய இம் மன்னனுடைய
அழகையும் நீ காண்பாயாக, (எ - று.)

     இக் கொலை வேற் காளை நாதகுலத்துத் தோன்றிக் குண்டல நகரை ஆள்வோன்;
நகைவேல் நம்பி இவன்போல் இங்கு அரசில்லை, பொன்னாரமார்பன் பொலிவும் நீ காண்டி
என்றான் என்க.

(681)

 

     (பாடம்) 1 நாதன்றன் 2 பொன்னார்.