பக்கம் : 1122
 
அரிமரபரையன் சிறப்பு
1812. சொரிமலர்த்தண் மலரணிந்த சோலைசூழ்
     சூரியத்தார் கோமான் றோலா
அரிகுலத்தார் போரேறிவ் வரியேறு
     போலிருந்த 1வரச காளை
வரிமலர்த்து மணிவண்டு புடைவருடு
     மாலையார் மகளிர் வாட்கண்
புரிமலர்த்தண் வரையகலம் புணராதார்
     புண்ணியங்கள் புணரா தாரே.
 
     (இ - ள்.) சொரிமலர் தண் மலர் அணிந்த சோலைசூழ் - உதிர்தலையுடைய மலர்ந்த
குளிர்ச்சி பொருந்திய மலரால் அழகுற்ற சோலைகளாற் சூழப்பட்ட, சூரியத்தார் கோமான் -
சூரியபுரத்து மன்னனும், தோலா - தோற்றறியாத, அரிகுலத்தார் போர் ஏறு -
அரிமரபிற்றோன்றிய போர்வல்ல சிங்கம், இவ்வரியேறு - இந்த ஆண்சிங்கம் போலிருந்த,
அரச காளை - மன்னனுடைய, புரிமலர்த்தண் வரையகலம் - விரும்புதற்குக் காரணமான
மலர் பொருந்திய குளிர்ந்த மலைபோன்ற மார்பிடத்தே, புணராதார் -
புணரப்பெறாதவராகிய, மலர்த்தும் வரிமணி வண்டு - மலர்களை நெகிழ்த்து மலரச்செய்யும்
வரியுடைய மணி போன்ற வண்டுகள், புடைவருடும் மாலையார் வாட்கண் மகளிர் பக்கத்தே
கிண்டுதலையுடைய மலர்மாலையணிந்தவராகிய வாள்போலும் கண்களையுடைய மகளிர்கள்,
புண்ணியங்கள் புணராதார் - அறஞ்செய்து அதன் பயன் கைவரப் பெறாதவரேயாவர்,
(எ - று.)

     இவன் சூரியத்தார் கோமான், தோலா அரிகுலத்தார் போரேறு, அரச காளை, இவ்
வரியேறு போலிருந்தான் வரையகலம் புணராதார் புண்ணியங்கள் புணராதார் என்றாள்
என்க.

(682)

 

பாண்டியன் பெருமை

1813. வேலைவாய்க் கருங்கடலுள் வெண்சங்கு
     மணிமுத்தும் விரவி 2யெங்கும்
மாலைவாய்க் கரும்பறா 3வகன்பண்ணை
     தழீஇயருகே யருவி தூங்கும்
 

     (பாடம்) 1 வரசர் காண. 2யேங்கும். 3வகன்பணை.