பக்கம் : 1124
 

     (இ - ள்.) கண் சுடர்கள் விட - கண்கள் தீப்பொறி கால, அனன்று - சினந்து,
கார்மேகம் என அதிரும் - கரிய முகிலைப் போன்று முழங்கும், களிநல் யானை -
களிப்புடைய நல்லிலக்கணம் அமைந்த யானையின் பிடரின்மேல், விண் சுடரும் -
விசும்பெங்கும் ஒளிபரப்பும், நெடுங்குடைக்கீழ் - நீண்ட குடையின் நீழலிலே இருந்து
ஊர்தலுடைய, விறல் வேந்தன் - ஆற்றல் சான்ற பாண்டியனுடைய, திறமிதனை -
பெருமையை, விளம்பக் கேளாய் - யான் கூறுவல் கேட்பாயாக, தண்சுடரோன் வழிமருகன் -
இப்பாண்டிமன்னன் திங்கள்மரபிற் பிறந்தவன், தென் மலைமேல் சந்தனமும் - தனது
பொதியிலிலே வளர்கின்ற சந்தனத்தின் குழம்பும், செம்பொன் ஆரமும் - இந்திரனால்
இடப்பட்ட செவ்விய பொன் ஆரமும், விரவிய - கலந்த, நல்வரைமார்பன் - நல்ல
மலைபோன்ற மார்பையுடையவன், உலகிற்கோர் திலதம் கண்டாய் - இப்பேருலத்திற்கே
திலதமானவன்காண், (எ - று.)

     திலதம் - மேன்மை. ஆரம் - முத்தாரமுமாம்.

     யானை விறல் வேந்தன் திறமிதனை விளம்பக்கேள்! தண்சுடரோன் வழிமருகன்,
தென்மலைமேற் சந்தனமும், ஆரத்து ஒண்சுடரும் விரவிய நல் மார்பன், உலகிற்கோர
திலதம் காண் என்றாள், என்க.

(684)

 

காபுரத்து வேந்தன்

1815. மழைக்கரும்புங் கொடிமுல்லை மருங்கேற
     வரம்பணைந்து தடாவி நீண்ட
கழைக்கரும்பு 1கண்ணீனுங் 2காபுரத்தார்
     கோமானிக் கதிர்வேற் காளை
இழைக் 3கரும்பு மிளமுலையா யெரிகதிரோன்
     வழிமருக னிவனீ ரீர்ந்தண்
தழைக்கரும்பின் முருகுயிர்க்குந் தாரகலஞ்
     சார்ந்தவர்க டவஞ்செய் தாரே.
 
     (இ - ள்.) மழைக்கு அரும்பும் கொடிமுல்லை - கார்ப்பருவத்தே அரும்புதலையுடைய முல்லைக்கொடி, மருங்கு ஏற - தம்பக்கத்தே படர, வரம்பு அணைந்து - கழனிகளின் வரம்பிலே சேர்ந்து, தடாவி - வளைந்து, நீண்ட - நீண்டு வளர்ந்த, கழைக்கரும்பு - கோலாகிய கரும்புகள், கண் ஈனும் - கணுக்களிலே முத்துக்களை ஈனாநிற்கும், காபுரத்தார் கோமான் இக்கதிர் வேல்காளை - காபுரத்தாருடைய அரசனாவான் இந்த ஒளி வேலேந்திய காளைபோன்ற மன்னன், இழைக்கு அரும்பும் இளமுலையாய் -
 

     (பாடம்) 1 கண்ணினும். 2 கரபுரத்தார். 3 கரும்பிளமுலையாய்.