பக்கம் : 1125
 

     ஆடையினூடே முகிழ்த்த இளமையுடைய முலையையுடைய சோதிமாலாய்,
எரிகதிரோன் வழிமருகன் - சூரிய மரபில் பிறந்தவன், இவன் - இம்மன்னனுடைய, நீர்
ஈர்ந்தண் தழைக் கரும்பின் முருகு உயிர்க்கும் தார் அகலம் - நீர்மையையுடைய ஈரம்
பொருந்திய குளிர்ந்த தழைகள் மிக்க கரும்பெழுதப்பட்ட மணங்கமழ்கின்ற
மலர்மாலையணிந்த மார்பிடத்தே, சார்ந்தவர்கள் தவம் செய்தாரே - பொருந்திய மகளிர்கள்
பெரிய தவம் செய்தவரே ஆதல் வேண்டும், (எ - று.)

     கரும்பு - எழுதிய கரும்பு என்க.

     காபுரத்தார் கோமானாகிய இக்கதிர் வேற்காளை கதிரோன் வழி மருகன்; இவன்
தாரகலம் சார்ந்தவர்கள் தவம் செய்தோரே, என்றாள் என்க.

(685)

 
சோழமன்னன் பெருமை
1816. வண்டறையு மரவிந்த 1வனத்துலாய்
     மதர்த்தெழுந்த மழலை யன்ன
முண்டுறைமுன் 2விளையாடி யிளையவர்க
     ணடைபயிலு முறந்தைக் கோமான்,
கொண்டறையு மிடிமுரசுங் கொடிமதிலுங்
     குளிர்புனலும் பொறியும் பூவும்
ஒண்டுறையு மும்மூன்று முடையகோ
     வேயிவன தெழிலுங் காணாய்.
 
     (இ - ள்.) வண்டு அறையும் அரவிந்த வனத்து உலாய் - வண்டுகள் பாடாநின்ற
தாமரைக் காட்டிலே திரிந்து, மதர்த்து எழுந்த மழலை அன்னம் - களித்து எழாநின்ற
இளைய அன்னப் பறவைகள், உண் துறைமுன் விளையாடி - நீர் உண்ணுதற்குரிய
துறைகளிலே விளையாட்டயர்ந்து, இளையவர்கள் நடை பயிலும் - இளமகளிரின் நடையைக்
கற்றுக் கொள்ளுகின்ற உறந்தைக் கோமான் - உறந்தை என்னும் நகரத்து மன்னனாகிய
சோழன், கொண்டு அறையும் இடி முரசும் - யானை மேற்கொண்டு முழக்குதலையுடைய
இடிபோன்ற ஒலியுடைய முரசும், கொடி மதிலும் - கொடிகள் நடப்பட்ட மதிலும், குளிர்
புனலும் - தட்பமிக்க நீர்நிலையும், பொறியும் - இலச்சினையும், பூவும் - அடையாள மலரும்
ஆகிய, ஒண்டுறையும் - ஒள்ளிய கடற்றுறையும், மும்மூன்றும் உடைய கோவே -
இவையிற்றுள் ஒவ்வொன்றிலும் தனித்தனி மூன்று மூன்று உடைய அரசனே ஆவான் இவன்,
இவனது எழிலும் காணாய் - இம்மனனுடைய அழகையும் கண்டருள்க, (எ - று.)
 

     (பாடம்) 1 வனத்துழாய். 2 விளையாடும்.