பக்கம் : 1126 | | முரசு, மதில் புனல் பொறிபூ துறை என்னும் இவை மும்மூன்றாக உடையன் என்பதாம். உண்டுறையுள் மழலையன்னம் விளையாடி, இளையவர்கள் நடை பயிலும் உறந்தைக்கோமான்; முரசும், மதிலும், புனலும், பொறியும், பூவும், துறையும் மும்மூன்றுடையான்; இச்சோழமன்னன் அழகையும் காணுதி என்றாள்; என்க. | (686) | | ஏமாங்கதத்து இளமன்னன் மாண்பு | 1817. | தழலவாந் தாமரையி னீரிதழுஞ் செங்குவளைத் தாதும் வாரி அழலவாஞ் செந்தோகை 1யலங்குபொலங் கதிர்ச்செந்நெ லலைத்த வாடை பழனவாய்ப் பைங்கரும்பின் வெண்போது பவழக்காற் செம்பொன் மாடத் தெழினிவாய்க் கொணர்ந்தசைக்கு 2மியலேமாங் கதநாட னிவனே 3கண்டாய். | (இ - ள்.) தழல் அவாம் தாமரையின் ஈர் இதழும் - தீப் பிழம்புபோன்று மலர்ந்த தாமரையினது ஈரமுடைய இதழ்களையும், செங்குவளைத் தாதும் வாரி - செங்கழுநீர் மலர்க்கண் உள்ள பூந்துகள்களையும் அள்ளிக்கொண்டு, அழல் அவாம் செந்தோகை அலங்குபொலங் கதிர்ச் செந்நெல் அலைத்த வாடை - தீச்சுடர் போன்ற செவ்விய தோடுகளையுடைய அசைகின்ற பொன்னிறமமைந்த கதிரையுடைய செவ்விய நெற்பயிரை வருத்தா நின்ற வாடைக்காற்று, பழனவாய்ப் பைங்கரும்பின் வெண்போது - வயல்களிடத்தே உள்ள பசிய கரும்பினுடைய வெண்மை நிறம் பொருந்திய மலர்களை, செம்பொன் மாடத்து - செம்பொன்னாலியன்ற மேனிலை மாடத்தின்கண் கட்டப்பட்ட, எழினிவாய்க் கொணர்ந்து அசைக்கும் - திரையின் மேல் கொண்டு வந்து வீசா நின்ற, இயல் ஏமாங்கத நாடன் இவன் கண்டாய் - இயல்புடைய ஏமாங்கத நாட்டு மன்னன் இவன் காண், (எ - று.) இதழும், தாதும் வாரி அலைத்த வாடை கரும்பின் வெண்மலரினை மாடத்து எழினிவாய்க் கொணர்ந்து அசைக்கும், ஏமாங்கத நாட்டு மன்னன் இவன் என்றான், என்க. | (687) | |
| (பாடம்) 1யலங்கலங். 2மேமாங். 3காணாய். | | |
|
|