பக்கம் : 1128
 

     (இ - ள்.) அவ் விருந்தான் - அவ்விடத்தே இருக்கின்றவன், அங்கநாடு உடையவர்
கோன் - அங்கநாட்டில் வாழுநர்க்கு வேந்தன், இவ் விருந்தான் - இவ்விடத்தே
இருக்கின்றவன், அவந்திக் கோமான் - அவந்தி நாட்டு அரசன், இக்குவளை வண்ணன் -
இந்தச் செங்கழுநீர் மலர்போன்ற நிறமுடையோன், கொங்குவார் பொழில் அணிந்த
கோசலத்தார் கோமான் - மணங்கமழும் நீளிய பூம்பொழில்களைப் பூண்டுள்ள கோசல
நாட்டினர் மன்னன், வைவேற் காளையிவன் - கூரிய வேலேந்திய காளைபோன்ற இவன்,
கங்கைதான் இருகரையும் - கங்கைப் பேரியாறு தன் இரண்டு கரைகளிடத்தேயும்,
கதிர்மணியும் பசும் பொன்னும் கலந்து சிந்தி - ஒளியுடைய மணிளையும் பசிய
பொன்துகள்களையும் விரவிச் சிதறி, வங்வாய்த் திரை அலைக்கும் - மரக்கலங்கயைுடைய
கடலை வருத்துகின்ற வள நாடன் - வளமுடைய நாட்டின் மன்னர் ஆவான், (எ - று.)

     இவ்விடத்திருந்தான் அங்கநாட்டரசன்; அவ்விடத்திருந்தான் அவந்திமன்னன்;
இக்குவளை வண்ணன் கோசலத்தார் கோமான்; இவன் கங்கை சிந்தித் திரையலைக்கும்
வளநாடன் என்றாள், என்க.

(689)

 
விச்சாதர மன்னர் பெருமை விளம்பல்
1820. வஞ்சியின்மெல் லிடையவளை வானிலா
     வளர்முன்றில் வலமாய்ச் சூழ்ந்து
பஞ்சியின்மெல் லடிநோவ நடைபயிற்றிப்
     படைவேந்தர் பலரைக் காட்டி,
மஞ்சிவரு மாளிகையின் வடமருங்கின்
     மணிமஞ்ச மலிரத் தோன்றும்,
1விஞ்சையர்த முலகாளும் விறல்வேந்தர்
     குழாங்காட்டி விரித்துச் சொன்னாள்.
 
     (இ - ள்.) வஞ்சியின் மெல் இடையவளை - வஞ்சிக்கொடி போன்ற நுணுகிய மெல்லிய
இடையையுடைய சோதிமாலையை, வால் நிலா வளர் முன்றில் வலமாய்ச் சூழ்ந்து - வெளிய
நிலவொளி மிக்க நிலா முற்றத்தை வலம்சூழ்ந்து, பஞ்சியின் மெல்லடி நோவ - அலத்தக
மூட்டப்பெற்ற மெல்லிய அடிகள் வருந்தும் படி, நடைபயிற்றி - நடத்தலைச் செய்வித்து,
படைவேந்தர் பலரைக் காட்டி - படைகளையுடைய அரசர்கள் பலரையும் அவளுக்குக்
காட்டி, மஞ்சு இவரும் மாளிகையின் - முகில்கள் தவழுகின்ற சுயம்வர மாளிகையின் ஊடே,
வடமருங்கின் மணிமஞ்சம்
 

     (பாடம்) 1 விஞ்சைய ருலகாளும்.