பக்கம் : 1128 | | (இ - ள்.) அவ் விருந்தான் - அவ்விடத்தே இருக்கின்றவன், அங்கநாடு உடையவர் கோன் - அங்கநாட்டில் வாழுநர்க்கு வேந்தன், இவ் விருந்தான் - இவ்விடத்தே இருக்கின்றவன், அவந்திக் கோமான் - அவந்தி நாட்டு அரசன், இக்குவளை வண்ணன் - இந்தச் செங்கழுநீர் மலர்போன்ற நிறமுடையோன், கொங்குவார் பொழில் அணிந்த கோசலத்தார் கோமான் - மணங்கமழும் நீளிய பூம்பொழில்களைப் பூண்டுள்ள கோசல நாட்டினர் மன்னன், வைவேற் காளையிவன் - கூரிய வேலேந்திய காளைபோன்ற இவன், கங்கைதான் இருகரையும் - கங்கைப் பேரியாறு தன் இரண்டு கரைகளிடத்தேயும், கதிர்மணியும் பசும் பொன்னும் கலந்து சிந்தி - ஒளியுடைய மணிளையும் பசிய பொன்துகள்களையும் விரவிச் சிதறி, வங்வாய்த் திரை அலைக்கும் - மரக்கலங்கயைுடைய கடலை வருத்துகின்ற வள நாடன் - வளமுடைய நாட்டின் மன்னர் ஆவான், (எ - று.) இவ்விடத்திருந்தான் அங்கநாட்டரசன்; அவ்விடத்திருந்தான் அவந்திமன்னன்; இக்குவளை வண்ணன் கோசலத்தார் கோமான்; இவன் கங்கை சிந்தித் திரையலைக்கும் வளநாடன் என்றாள், என்க. | (689) | | விச்சாதர மன்னர் பெருமை விளம்பல் | 1820. | வஞ்சியின்மெல் லிடையவளை வானிலா வளர்முன்றில் வலமாய்ச் சூழ்ந்து பஞ்சியின்மெல் லடிநோவ நடைபயிற்றிப் படைவேந்தர் பலரைக் காட்டி, மஞ்சிவரு மாளிகையின் வடமருங்கின் மணிமஞ்ச மலிரத் தோன்றும், 1விஞ்சையர்த முலகாளும் விறல்வேந்தர் குழாங்காட்டி விரித்துச் சொன்னாள். | (இ - ள்.) வஞ்சியின் மெல் இடையவளை - வஞ்சிக்கொடி போன்ற நுணுகிய மெல்லிய இடையையுடைய சோதிமாலையை, வால் நிலா வளர் முன்றில் வலமாய்ச் சூழ்ந்து - வெளிய நிலவொளி மிக்க நிலா முற்றத்தை வலம்சூழ்ந்து, பஞ்சியின் மெல்லடி நோவ - அலத்தக மூட்டப்பெற்ற மெல்லிய அடிகள் வருந்தும் படி, நடைபயிற்றி - நடத்தலைச் செய்வித்து, படைவேந்தர் பலரைக் காட்டி - படைகளையுடைய அரசர்கள் பலரையும் அவளுக்குக் காட்டி, மஞ்சு இவரும் மாளிகையின் - முகில்கள் தவழுகின்ற சுயம்வர மாளிகையின் ஊடே, வடமருங்கின் மணிமஞ்சம் | |
| (பாடம்) 1 விஞ்சைய ருலகாளும். | | |
|
|