பக்கம் : 1129
 

      மலிரத் தோன்றும் - வடக்குப் பகுதியில் மணிகளானியன்ற கட்டில்கள் திகழுமாறு
வீறறிருந்து விளங்கும், விஞ்சையர்தம் உலகு ஆளும் விறல்வேந்தர் குழாங்காட்டி -
விச்சாதரர் உலகத்தை ஆளுகின்ற வெற்றியையுடைய மன்னர்கள் கூட்டத்தையும்
அவளுக்குக் காட்டி, விரித்துச் சொன்னாள் - அவர் வரலாற்றினையும் விரித்து விளம்பினாள்,

     தோழி மெல்லிடையவளைச் சூழ்ந்து நடைபயிற்றிப் படைவேந்தர் பலரைக் காட்டி,
மாளிகையின் வடமருங்கில் மஞ்சம் மலிரத் தோன்றும் விஞ்சையர்தம் விறல்வேந்தர்
குழாங்காட்டி விரித்துச் சொன்னாள் என்க.

 (690)

 

இதுவுமது

1821. மாடிலங்கு மழைதவழ்ந்து மணியருவி
     பொன்னறைமேல் வரன்றி 1வன்பூந்
தோடிலங்கு கற்பகமுஞ் சுரபுன்னை
     வனங்களுமே துதைந்து வெள்ளிக்
கோடிலங்கு நெடுவரைமேற் குடைவேந்
     ரிவர்குணங்கள் கூறக் கேட்பின்
ஏடிலங்கு பூங்கோதா யிமையவரின்
     வேறாய திமைப்பே கண்டாய்.
 
     (இ - ள்.) இலங்கும் மழை மாடு தவழ்ந்து - திகழ்கின்ற முகில்கள் பக்கங்களிலே
தவழப்பட்டும், பொன்னறைமேல் அருவிமணி வரன்றி - உச்சியிடத்தே நீர் அருவிகளால்
மணிகள் அரிக்கப்பட்டும், வண் பூந்தோடு இலங்கும் கற்பகமும் சுரபுன்னை வனங்களுமே
துதைந்து - வளவிய மலர் இதழ்கள் மிளிர்கின்ற கற்பகமரங்களும் சுரபுன்னைக் காடுகளுமே
அடரப்பட்டும், இலங்கும் வெள்ளிக்கோடு நெடுவரைமேல் - திகழ்கின்ற
கொடுமுடிகளையுடைய நீண்ட வெள்ளிமலையின் மேலே, குடை வேந்தர் - குடை
கவித்தாளுகின்ற மன்னர்களாகிய, இவர் குணங்கள் கூறக்கேட்பின் - இவருடைய
பண்புகளைக் கூறுமாறு கேட்குமிடத்தே, ஏடிலங்கு பூங்கோதாய் - இதழ்கள் விளங்குகின்ற
அழகிய மலர்மாலையை அணிந்த சோதிமாலாய், இமையவரின் வேறாயது இமைப்பே
கண்டாய் - இவர், அமரர்களினின்றும் வேறாகக் காணப்படுதற்குக் காரணம், இவர்கள்
கண்கள் இமைப்பதொன்றேயாம், (எ - று.)
 

     (பாடம்) 1 வம்பூந்.