பக்கம் : 1133 | | சோதிமாலை நிறையழிந்தவளாய் நடுங்கி நாணித் தன் கையிலுள்ள மாலையை நோக்கித் தோழியின் புறத்தே மறைந்தவளாய்க் குமரன்போல்வான் தோள் மேல் வீழ்த்தாள் உலகு ஒலிபடைத்தது என்க. | (695) | | ஏனைய அரசர்களின் மனநிலை | 1826. | ஆர்த்ததங் கரவத் தானை யாலித்த முரசுஞ் சங்கும் தேர்த்தன மலருஞ் செம்பொற் சுண்ணமுந் திசைக ளெல்லாம் போர்த்தன பதாகை பொங்கிப் பூமியங் கிழவ ருள்ளம் வேர்த்தன வேர்த்துத் தாமே வெய்துயிர்த் தொழிந்த வன்றே. | (இ - ள்.) ஆர்த்தது அங்கு அரவத்தானை - அவ்விடத்தே ஒலியுடைய படைகள் மிகவும் முழங்கின, முரசும் சங்கும் ஆலித்த - முரசுகளும் சங்கங்களும் முழங்கின, செம்பொற் சுண்ணமும் மலரும் - செவ்விய பொற் பொடிகளும் மலர்களும், தேர்த்தன - தேங்கின, பதாகை பொங்கி திசைகள் எல்லாம் போர்த்தன - கொடிகள் மிக்குத் திக்குகளை மறைத்தன, பூமியங் கிழவர் உள்ளம் - அரசருடைய நெஞ்சுகள், வேர்த்தன- வியர்த்தன. வேர்த்துத் தாமே வெய்துயிர்த்து ஒழிந்த அன்றே - தம்முள்ளேயே புழுங்கி வியர்த்து நெடுமூச்செறிந்து அழிந்தன, (எ - று.) மனம் வியர்த்தல் - மனம் புழுங்குதல், “பொள்ளென வாங்கே புறம் வேரார், காலம் பார்த்து உள்வேர்ப்பர்,Ó என்பதனானும் அறிக. அவ்வழி தானை ஆர்த்தன முரசமுதலியன முழங்கின. மலரும் சுண்ணமும் தேங்கின, அரசருள்ளம் வேர்த்துத் தாமே வெய்துயிர்த்து ஒழிந்த என்க. | (696) | | அம்மன்னர்கள் ஆறுதல் எய்துதல் | 1827. | புனைவுதா னிகந்த கோதைப் பொன்னனாள் பூமி பாலர் நினைவுதா னிகந்து காளை வடிவெனு நிகளஞ் சேர வினைகடாம் விளையு 1மாறியாம் வேண்டிய வாறு வாரா வினையதால் வினையின் றன்மை யெனநினைந் தாறி னாரே. | சில பிரதிகளில் இச்செய்யுளில்லை. | |
| (பாடம்) 1 மாறு. | | |
|
|