பக்கம் : 1135 | | சோதிமாலைக்கும் அமிததேசனுக்கும் உள்ள உறவினை உணர்த்து வார் “நெய்த்தலைப்பாலுக்காங்குÓ என்றார். மைத்துன குமரன்றன்னை மடமொழி மாலைசூட்ட, இத்தலை ஆழி வேந்தன் அவ்வேலினாற்குக் கடிவினை முடிவித்தான் என்க. | (698) | | இதுவுமது | 1829. | விண்ணகம் புகழு நீர்மை விழுக்கலம் பரப்பி யார மண்ணக வளாகத் துள்ள மன்னரான் மண்ணு நீர்தந் தெண்ணகன் புகழி னாரை யெழிலொளி துளும்ப வாட்டிப் புண்ணகங் கமழும் வேலான் பொன்மழை பொழிவித் தானே. | (இ - ள்.) விண்ணகம் புகழும் நீர்மை விழுக்கலம் பரப்பி - அமரரும் புகழ்தற்குரிய நீர்மையுடைய சிறந்த கலங்களைப் பரப்பி வைத்து, ஆர - அவை நிறையுமாறு, மண்ணக வளாகத்துள்ள - உலகில் உள்ள, மன்னரால் - அரசர்களாலே, மண்ணு நீர் தந்து - ஆடுதற்குரிய கடவுட்டன்மையுடைய நீர் கொணர்வித்து, எண் அகன் புகழினாரை - எண்ணம் விரிதற்கு ஏதுவாய் நீண்ட புகழுடைய அமித தேசன் சோதி மாலையாகிய இருவரையும், எழில் ஒளி துளும்ப ஆட்டி - அழகு மிளிர நீராட்டி, புண் அகம் கமழும் வேலான் - அகத்தே ஊன் கமழ்தலையுடைய வேற்படை ஏந்திய திவிட்ட மன்னன், பொன் மழை பொழிவித்தானே - பொன்மாரி இரவலர்க்குப் பொழியச் செய்தான், (எ - று.) விழுக்கலம் - பொன் முதலியவற்றாலாய கலங்கள். மண்ணும் - குளிக்கும். விழுக்கலம் பரப்பி, ஆர மன்னரால் மண்ணும் நீர் தந்து, புகழினாரை ஒளி துளும்ப ஆட்டி, வேலான் பொன் மழை பொழிவித்தான் என்க. | (699) | | இதுவுமது | 1830. | தருமணன் மணிமுத் தாகத் 1தண்டுல மியற்றிக் 2கான்யா றருமணற் றருப்பை சூழ்ந்தாங் கதன்மிசை பரிதி பாய்த்திப் | |
| (பாடம்) 1 தண்டில். 2 கானிற். | | |
|
|