பக்கம் : 1135
 

      சோதிமாலைக்கும் அமிததேசனுக்கும் உள்ள உறவினை உணர்த்து வார்
“நெய்த்தலைப்பாலுக்காங்குÓ என்றார்.

     மைத்துன குமரன்றன்னை மடமொழி மாலைசூட்ட, இத்தலை ஆழி வேந்தன்
அவ்வேலினாற்குக் கடிவினை முடிவித்தான் என்க.

(698)

 
இதுவுமது
1829. விண்ணகம் புகழு நீர்மை
     விழுக்கலம் பரப்பி யார
மண்ணக வளாகத் துள்ள
     மன்னரான் மண்ணு நீர்தந்
தெண்ணகன் புகழி னாரை
     யெழிலொளி துளும்ப வாட்டிப்
புண்ணகங் கமழும் வேலான்
     பொன்மழை பொழிவித் தானே.
 
     (இ - ள்.) விண்ணகம் புகழும் நீர்மை விழுக்கலம் பரப்பி - அமரரும் புகழ்தற்குரிய
நீர்மையுடைய சிறந்த கலங்களைப் பரப்பி வைத்து, ஆர - அவை நிறையுமாறு, மண்ணக
வளாகத்துள்ள - உலகில் உள்ள, மன்னரால் - அரசர்களாலே, மண்ணு நீர் தந்து -
ஆடுதற்குரிய கடவுட்டன்மையுடைய நீர் கொணர்வித்து, எண் அகன் புகழினாரை -
எண்ணம் விரிதற்கு ஏதுவாய் நீண்ட புகழுடைய அமித தேசன் சோதி மாலையாகிய
இருவரையும், எழில் ஒளி துளும்ப ஆட்டி - அழகு மிளிர நீராட்டி, புண் அகம் கமழும்
வேலான் - அகத்தே ஊன் கமழ்தலையுடைய வேற்படை ஏந்திய திவிட்ட மன்னன், பொன்
மழை பொழிவித்தானே - பொன்மாரி இரவலர்க்குப் பொழியச் செய்தான், (எ - று.)

     விழுக்கலம் - பொன் முதலியவற்றாலாய கலங்கள். மண்ணும் - குளிக்கும்.
விழுக்கலம் பரப்பி, ஆர மன்னரால் மண்ணும் நீர் தந்து, புகழினாரை ஒளி துளும்ப
ஆட்டி, வேலான் பொன் மழை பொழிவித்தான் என்க.

(699)

 
இதுவுமது
1830. தருமணன் மணிமுத் தாகத்
1தண்டுல மியற்றிக் 2கான்யா
றருமணற் றருப்பை சூழ்ந்தாங்
கதன்மிசை பரிதி பாய்த்திப்
 

     (பாடம்) 1 தண்டில். 2 கானிற்.