பக்கம் : 1137 | | வீரக்கழலை யணிந்த தேவர்கள், படைத்த - கடல்கடைந்து உண்டாக்கிய, நீர் அமிர்தப்புள்ளி - நீர்மையையுடைய அமிழ்தத்துளி, அங்கெழு மதியம் தன் மேல் - அப்பாற்கடலிலே தோன்றிய திங்கள் மண்டிலத்திலே தெறித்து, அரும்பி யாங்கு - முகிழ்த்தாற் போன்று, அணிந்த அன்றே - அவள் முகத்தை அழகு செய்தன, (எ - று.) தையல் காளையோடும் அழல் வலம் செய்த பொழுது குழைமுகம் பொறித்த வியர்வைப்புள்ளி, திங்கள் மண்டிலத்தே முகிழ்த்த அமிழ்தப் புள்ளிபோலே அவள் முகத்தை அழகுறுத்தின. என்க. | (701) | | அருக்ககீர்த்தி தன் மகள் சுதாரைக்குச் சுயம்வரம் தொடங்கல் | 1832. | மன்னவ குமரனாங்கு மடந்தையைப் புணர்ந்து மாடத் தின்னகி லமளி மேலா லிளமுலைத் தடத்து மூழ்க அன்னவன் றாதை செங்கோ லாணைவே லருக்க கீர்த்தி தன்னமர் மடந்தைக் கேற்ற சயமர மறைவித் தானே. | (இ - ள்.) மன்னவ குமரன் ஆங்கு - அரசன் மகனாகிய அமித தேசன் அவ்வாறு, மடந்தையைப் புணர்ந்து - சோதி மாலையை வேட்டு, மாடத்து - மேனிலை மாடத்தின்கண், இன் அகில் அமளி மேலால் - இனிய அகில் மணங்கமழும் கட்டிலின் மேலே, இளமுலைத்தடத்து மூழ்க - சோதிமாலையின் இளமைமிக்க முலைப்போகம் என்னும் நீர் நிலையிலே முழுகா நிற்ப, அன்னவன் தாதை - அவ்வமித தேசனுடைய தந்தையாகிய, செங்கோல் ஆணைவேல் அருக்க கீர்த்தி - செங்கோல் முறை வழாது ஆணை செலுத்தும் வேற்படையையுடைய அருக்க கீர்த்தி, தன் அமர் மடந்தைக்கு ஏற்ற - தனது அன்பிற்குரிய சுதாரை என்னும் மகளுக்குப் பொருந்திய, சயமரம் அறைவித்தான் - சுயம்வரச் செய்தியை முரசறைந்து அறிவிப்பானாயினன், (எ - று.) அமிததேசன் சோதிமாலையை மணந்து மாடத்தே காமவின்பம் நுகர்ந்திருக்கலானான். அப்பால் அருக்க கீர்த்தி தன் மகளாகிய சுதாரைக்குச் சுயம்வரம் என்று முரசறைவித்தான் என்க. | (702) | | சுதாரைக்குத் தோழி அரசர் வரலாறு கூறுதல் | 1833. | சயமர மறைந்த நன்னாட் டமனிய மஞ்சம் பாவி இயமரந் துவைப்ப வேறி யிகன்மன்ன ரிருந்த போழ்தில் பயமலை மன்னன் பாவைக் கவரவர் பண்பு கூறிக் கயமலர் நெடுங்க ணாளோர் காரிகை காட்டி னாளே. |
| | | |
|
|