பக்கம் : 1140 | | (இ - ள்.) கழல் வலம் புரிந்த நோன்தாள் கடல் வண்ணன் புதல்வன் - வீரக்கழலை வலஞ்சுற்றிக் கட்டிய வலிய கால்களை யுடைய கடல் நிறத்தானாகிய திவிட்டனுடைய திருமகனாகிய விசயன் என்பான், காமர் குழல் வலம்புரிந்த கோதை - விருப்பம் தரும் குழலை வலமாகச் சுற்றிய மலர் மாலையையுடைய சுதாரையின், குழைமுகம் வியர்ப்ப வேட்டான் - தோடுகள் திகழும் முகம் வியர்க்கும்படி மணந்தான், அழல் வலம் புரிந்து சூழ்ந்து அத்தொழில் முடிந்த பின்னை - தீயை வலமாகச் சூழ வந்து அச்சடங்குகள் நிறைவேறிய பின்னர், தழல் வலம்புரிந்த வேலான் - தீயை ஒத்த வன்மையுடைய வேலானாகிய விசயன், தடமுலை வாரிசார்ந்தான் - சுதாரையின் அகலியவாய முலைப்போகம் என்னும் கடலுள் மூழ்கினான், (எ - று,) தழல்வலம் புரிந்த வேல் - நெருப்பைப் போன்று அழிக்கும் வன்மையுடைய வேலென்க. குழைமுகம் வியர்த்தல் - மெய்ப்பாடு தடமுலைவாரி - பெரிய முலையென்னும் இன்பக்கடல். புதல்வன் கோதை முகம்வியர்ப்ப வேட்டு அத்தொழில் முடிந்த பின்னைத் தடமுலை வாரி சார்ந்தான் என்க. | (706) | | சோதிமாலையும் அமித தேசனும் தம் நாடெய்துதல் | 1837. | மாதரஞ் சாய லாளு மணிவண்ணன் சிறுவன் றானும் ஓதநீ ரின்ப மென்னு மொலிகடற் றரங்க மூழ்கச் சோதியம் பெயரி னாளுங் சுடரவன் புதல்வன் றானுங் காதலிற் களித்துத் தங்கள் கனவரை யுலகஞ் சார்ந்தார். | (இ - ள்.) மாதர் அஞ்சாயலாளும் - மிக்க அழகும் சாயலும் உடைய சுதாரையும், மணிவண்ணன் சிறுவன்றானும் - திவிட்டன் மகனாகிய விசயனும், ஓது அ நீர் இன்ப மென்னும் ஒலிகடல் தரங்கம் மூழ்க - சான்றோர்களால் புகழ்ந்து ஓதப்படும் அழகிய நீர்மையை உடைய காமவின்பம் என்று கூறப்படும் முழக்கமுடைய கடலின் அலைகளிலே மூழ்கித் திளையா நிற்ப, சோதியம் பெயரினாளும் - சோதிமாலை என்பாளும், சுடரவன் புதல்வன்றானும் - அருக்ககீர்த்தியின் மகனாகிய அமிததேசனும், காதலிற் களித்து - காதலின்பத்தே பெரிதும் மகிழ்ச்சியடைந்து, தங்கள் கனவரை யுலகம் சார்ந்தார் - தம்முடைய கனவிய மலையுலகமாகிய இரதநூபுரச் சக்கிரவாளத்தை எய்தினார்கள், (எ - று.) ஓதநீர் இன்பம் - நூலோர்களால் ஓதப்பட்ட அழகிய நீர்மையுடைய இன்பம் என்க. இவ்வாறு கூறாக்கால் ஓதநீர் இன்பமென்னும் ஒலிகடற் றரங்கம் என்பத கூறியது கூறலாய்ப் பொருள் படாமை காண்க. |
| | | |
|
|