பக்கம் : 1148 | | பெருகினர் - செல்வமுதலியவற்றால் பெருக்கமெய்தினர் எனினுமாம். “மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத் தலமிசைக் கொண்ட குடையர் - நிலமிசைத் துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட் டாரல்லால் எஞ்சினார் இவ்வுலகத் தில்.Ó (நாலடி. 21) இச்செய்யுளை ஈண்டு நோக்குக. | (717) | | யாக்கை நிலையாமை | 1848. | பிறந்துநாம் புறஞ்செய் கின்ற பேதையிவ் வுடலந் தானும் இறந்தநாள் போல்வ தின்றா யிற்றையி னாளை வேறாய்ப் பறைந்துநாம் பற்றப் பற்றப் பற்றுவிட் டகலு மாகில் சிறந்தனர் பிறர்கள் யாரே சிந்தைநீ சிந்தி யென்றான். | (இ - ள்.) பிறந்து - நம்மொடு நாமாகவே பிறந்து, நாம் புறஞ்செய்கின்ற - நம்மால் பெரிதும் போற்றப்படுகின்ற, பேதையிவ் வுடலந்தானும் - அறிவிலதாகிய இவ்வுடலும், இறந்த நாள் போல்வது இன்றாய் - கழிந்த நாள்களிலே இருந்தபடியே இராததாகி, இற்றையின் நாளை வேறாய் - இன்றிருப்பதாம் தன்மைகெட்டு நாளைக்கு வேறு தன்மைத்தாய் மாறி, பறைந்து நாம் பற்றப் பற்ற - தேய்ந்து யாம் அதனை விடாதே பற்றிப் போற்றா நிற்பவும், பற்றுவிட்டு அகலுமாகில் - அது நம்மைப் பற்றுதல் ஒழிந்து இறந்துபடுமானால், சிறந்தனர் பிறர்கள் யாரே - நமக்குச் சிறந்த உரிமையுடையார் இவ்வுடலினும் அயலில் உள்ள பிறர்கள் யார்தாம் உளராவார், சிந்தை - என் நெஞ்சே! நீ சிந்தி - நீ இதனை ஆராய்ந்து காணுதி, என்றான் - என்று இயம்பினான், (எ - று.) நம்மோடே பிறந்து, நம்மாற் படுசாந்தும் கோதையும் கொண்டு பாராட்டிப் புறஞ்செய்யும் இவ்வுடலம், நாடோறும் மாறி மாறி முதிர்ந்து வருதல் கண்கூடு. அதனை யாம் எவ்வளவு விடாது பற்றினும், அது நம்மைப் பற்றாது ஒருநாள் மாண்டொழிதலும் திண்ணம்; ஆகலின் என்னெஞ்சே இதனை நன்கு எண்ணிப்பார் என்றான் என்க. | (718) | | தூய் தன்மை | 1849. | தொகைமல ரலங்கல் சூடித் தூநறுஞ் சுண்ண மப்பிப் புகைநனி கமழ வூட்டிப் புறஞ்செயப் பட்ட மேனி | |
| | | |
|
|