பக்கம் : 1149
 
  சிகையினோர் சிறுமுட் டீண்டச்
      சிதைந்தழுக் கொழுகு மாயின்
நகைபெரி துடைத்து நாணா
      மிதனைதா 1மகிழ்த னெஞ்சே.
 
     (இ - ள்.) தொகைமலர் அலங்கல் சூடி - தொகுக்கப்பட்ட மலர்களாற் புனைந்த
மாலைகளை அணிந்து, தூநறும் சுண்ணம் அப்பி - தூய நறுமணங்கமழும் மணப்
பொடிகளைத் திமிர்ந்து, புகை நனி கமழ ஊட்டி - மணப் புகைகளை நன்கு மணங்
கமழும்படி ஊட்டி, புறஞ்செயப்பட்ட மேனி - போற்றப்பட்ட இவ்வுடல், ஓர் முள் சிகையின்
தீண்ட - ஒரு சிறு முள் தனது நுனியாலே குத்திய மாத்திரையானே, சிதைந்து - ஊன்
சிதைவுற்று, அழுக்கு ஒழுகுமாயின் - சீழ் வடிதலையுடைத்தாம் எனின், இதனை யாம்
மகிழ்தல் - இத்தகைய இழிந்த இவ்வுடலை யாம் பொருளாகக் கொண்டு இன்புறுதல்,
நாணாம் - நாணுத் தகவுடைத்தாம், நகை பெரி துடைத்து - மேலும் இப் பேதைமை
சான்றோரான் நகைக்கப்படுதலையும் மிக உடையதாகும், (எ - று.)

     “மாக்கேழ் மடநல்லாய் என்றரற்றும் சான்றவர்
     நோக்கார்கொல் நொய்யதோர் புக்கில்லை - யாக்கைக்கோர்
     ஈச்சிற கன்னதோர் தோலறினும் வேண்டுமே
     காக்கை கடிவதோர் கோல்Ó (நாலடி. தூய்த - 1)

     என்னும் நாலடியோடு இதனை ஒப்புக் காண்க.   

(719) 

 

இதுவுமது

1850. ஒழுகிய முடையு நீரு
|
     2முதலகை யிகப்ப வூறும்
அழுகலிவ் வள்ளல் யாக்கை
     யகம்புற மாயிற் றாயில்
கழுகொடு கவருங் காக்கை
     3கைத்தடி கொண்டு காத்தும்
அழகுள சுழலு மன்னோ
     வாயிரச் சாதி மாதோ.
 
     (இ - ள்.) ஒழுகிய முடையும் நீரும் - ஒழுகும் முறைமையுடைய மலமும் மூத்திரமும்;
முதல - முதலவாகிய இழிபொருள்கள், கையிகப்ப -மிகுதியாக, ஊறும் - ஊறுதற்கு இடமான,
அழுகல் - அழுகற் பண்டமாம், இ அள்ளல் யாக்கை - இந்த ஊன் சேற்றாலாய உடல்,
அகம் புறம் ஆயிற்றாயில் - உட்புறம் வெளிப்புறமாமாறு ஆய்விட்டால், கைத்தடி கொண்டு
காத்தும் - கைத்தடியை வைத்துக்கொண்டு பாதுகாத்தவிடத்தும், கவரும் கழுகொடு காக்கை
அழகுள ஆயிரச் சாதி சுழலும் மன்னோ - ஊன் கவர்ந்துண்ணும் கழுகு காக்கை முதலிய
அழகுடைய உயிரினங்கள் ஆயிரவகைகள் புறம் போகாமற் சுற்றா நிற்கும், (எ - று.)
 

     (பாடம்) 1 மகிழ்துநெ. 2முதலிகை யுவப்ப - முதவிகை யுகப்ப. 3கைதடி.