பக்கம் : 1150
 

      “ஊறி யுவர்த்தக்க வொன்பது வாய்ப்புலனும், கோதிக் குழம்பலைக்கும் கும்பத்தைÓ
என்றார் பிறரும். அழகுள கழுகொடு காக்கை ஆயிரச்சாதி எனக் கூட்டுக. முடை - மலம் -
முடைநாற்ற முடையதனை முடை என்றார். முடை ஊனுமாம்.

(720)

 
அறிவிலாதார் செயல்
1851. வல்வினை விளைத்த 1மாந்தர்
     மற்றதன் வித்து மாட்டிப்
புல்வினை கான மண்டிப்
     புலியின்வாய்ப் பட்ட தேபோல்
நல்வினை யினிதி 2னூட்டு
     நல்வினை முதல்கண் மாறி
இல்வினை யின்பம் வெஃகி
     யிறுபவே யறிவி லாதார்.

 
     (இ - ள்.) நல்வினை இனிதின் ஊட்டும் - நல்வினைகள் தம் பயனை ஊட்டுமிடத்து
இனிதின் இன்புறுமாறு ஊட்டா நிற்கும், நல்வினை முதல்கண் மாறி - அந்நல் வினையின்
காரணங்களினின்றும் விலகி, இல்வினை யின்பம் வெஃகி - இல்லிடத்தே யிருந்து முயன்று
பெறும் இன்பத்தையே பெரிதும் விரும்பி, வல்வினை விளைத்த அறிவிலாதார் மாந்தர் -
தீவினைகளையே பெரிதும் செய்துகொண்ட பேதை மனிதர்கள், மற்றதன் வித்தும் மாட்டி -
அத்தீவினைகளின் விதைகளையும் மேலைக்கு விளைவாக மூட்டி வைத்து, புல்வினைக்
கானம் மண்டி - தம்மைச் சூழத் தீவினைக்காடுகளே மண்டப் பெற்று, புலியின்
வாய்ப்பட்டதேபோல் - அக்காட்டினூடே புலியின் வாயகத்தே பட்டது போன்று துன்பமுற்று,
இறுபவே - மாண்டொழிவர், (எ-று.)

     இன்பமே காமுறுவோராயிருந்தும், அவ்வின்பம் நல்வினையே ஊட்டும் என்பதனை
அறியாதார், இன்பமே வெஃகி அல்வினை செய்து அல்லல் உ.ற்று மாண்டொழிவர் என
அறியாமையை நினைந்து இரங்கியவாறு.

     “துன்பம் பலநாள் உழந்தும் ஒருநாளை,
     இன்பமே காமுறுவ ரேழையார்Ó
என்றார் பிறரும்,    

(721)

 
பயாபதி அமைச்சரோடிருந்து ஆராய்தல்
1852. இன்னன பலவுஞ் சிந்தித் திருந்தது மிகையென் றெண்ணி
மன்னவ னுழையர் தம்மான் மந்திரத் தவரைக் கூவிப்
பொன்னவிர் பவழத் திண்காற் புரிமணிக் கூட மெய்தித்
தன்னம ரமைச்ச ரோடு தானமர்ந் திருந்து சொன்னான்.
 

     (பாடம்) 1 வாதல். 2 னூட்டி.