பக்கம் : 1154 | | (இ - ள்.) சந்தினால் தவிர்க்கலாமோ - அக்கூற்றவாசனைச் சந்து செய்தலாலே உயிர்கொள்ளாதபடி ஒழித்தல் கூடுமோ, சார்பினால் ஒழிக்கலாமோ - அன்றி அவன்பால் அடைக்கலம் புகும் ஆற்றாலே ஒழித்தல் கூடுமோ, பந்தியா முன்னம்தாமே - அவன் நம்மைக் கட்டுதற்கு முன்னரே, பகைத்து இருந்து - அவனைப் பகைத்தே அவன் நம்மேல் வாராதபடி அரண்செய்து கொண்டு இருந்து, உய்யலாமோ - அவன்பாற் றப்பி உய்தல் கூடுமோ அன்றி, வெந்திறல் காலன் தன்னை - வெவ்விய ஆற்றலுடைய அம்மறலியை, மேற்சென்று - போர்மேற் சென்று போர்செய்து, வெல்லலாமோ - வென்றொழித்தல் கூடுமோ, யாங்கள் - யாம், உய்ந்து - அம்மறலிக்குத் தப்பி, உயிர் வாழும் உபாயம் - உயிர்வாழ்வதற்குரிய உபாயத்தை ஆராய்ந்து, உரைமின் என்றான் - கூறுங்கோள் என்று இயம்பினான், (எ - று.) சாம, பேத, தான, தண்டம் என்னும் உபாயங்களாலே அம் மறலிக்குத் தப்பி உயிர் வாழ்தல் கூடுமோ உரைமின் என்றான் என்க. | (726) | | கூற்றத்தை மாற்ற யாம் அறிந்திலோம் எனல் | 1857. | பீழைமை பலவுஞ் செய்து பிணிப்படை பரப்பி வந்து வாழுயிர்ப் 1பொழித்து வவ்வி வலிந்துயிர் வாங்கி யுண்ணும் 2கூழைமை பயின்ற கூற்ற வரசனைக் குதிக்குஞ் சூழ்ச்சி பாழியந் தடக்கை வேந்தே பயின்றிலம் யாங்க ளென்றார். | (இ - ள்.) பீழைமை பலவும் செய்து - பல்வேறு இன்னல்களையும் இயற்றி, பிணிப்படை பரப்பி - நோயாகிய பல்வேறு படைகளையும் பரப்பி, வந்து - ஆயுள் முடிவிலே வந்து, வாழ் உயிர்ப்பு ஒழித்து - வாழ்தற்குக் காரணமான மூச்சையும் நிறுத்தி, உயிர் வலிந்து வவ்வி வாங்கி - உயிரை வலிந்து பிடித்துக் கவர்ந்து, உண்ணும் - குடிக்கின்ற, கூழைமை பயின்ற கூற்ற அரசனை - கயமைத் தொழிலில் வல்லவனாகிய மறலி மன்னனை, குதிக்கும் சூழ்ச்சி - கடத்தற்குரிய சூழ்வினையை, பாழியம் தடக்கை வேந்தே - வலியவாய அழகிய பெரிய கைகளையுடைய அரசனே, யாங்கள் பயின்றிலம் என்றார்- யாங்கள் கற்றோமில்லை என்று கூறினர், (எ - று.) | |
| (பாடம்) 1 வாரி. 2 கூழமை | | |
|
|