பக்கம் : 1156 | | | பெருங்களி யாளன் காலன் பிறையெயி றணிந்து நின்ற இருங்களி யாணர் வாழ்விற் கிமைப்பிடை பெரிது கண்டாய். | (இ - ள்.) அருங்களி யானை வேந்தே - அணுகுதற்கரிய மதக் களிப்பையுடைய யானையை உடைய அரசே, அத்துணைப் பாணியுண்டோ - அவ்வளவு கால விடையீடுதானும் உளதேயோ, கருங்களி மதநல் யானை - கரிய களிப்பையுடைய மதநீர் பொழியும் நல்ல யானையினுடைய, வாய்புகு கவளமேபோல் - வாயிடத்தே புகுதலையுடைய கவளத்தைப் போன்று, பெருங் களியாளன் காலன் - மிக்க களிப்பையுடைய மறலியின், பிறை யெயிறு அணிந்து நின்ற - பிறைபோல வளைந்த கோரப்பற்களை அணுகி நிற்கின்ற, இருங்களியாணர் வாழ்விற்கு - மிக்க மகிழ்ச்சிக்குக் காரணமான புது வருவாயையுடைய மனிதருடைய வாழ்க்கை அழிந்து ஒழிதற்கு, இமைப்பிடைப் பெரிது கண்டாய் - கண்ணிமைப் போதாகிய ஒரு மாத்திரையும் மிகையாகும் காண், (எ - று.) கவளம் - யானை உணவு. அணிந்து - அண்மி. மான் குட்டியின் வாழ்வுகூட நீளிதாம்; மனிதர் வாழ்வு அழிதற்கு ஒரு கண்ணிமைப் பொழுதும் மிகை என்றார் என்க. இருங்களியாணர் வாழ்க்கை என்றது இகழ்ச்சிக் குறிப்பு. | (729) | | 1860. | இன்னுயி ரழியும் போழ்து மிறைவனுக் குறுதி யல்லான் முன்னிய முகமன் மாட்டா முற்றிய வறிவி னாரை மன்னவன் மகிழ்ந்து நோக்கி வாழுயிர் வவ்வுங் காலன் தன்னைநா மிகந்து சேருஞ் சரண்பிறி துரைமி னென்றான். | (இ - ள்.) இன் உயிர் அழியும் போழ்தும் - தம் இனிய உயிர்க்கு அழிவு நேர்வதாய காலத்தேயும், இறைவனுக்கு - தம் அரசனுக்கு, உறுதி அல்லால் - உறுதி பயப்பனவற்றையே கூறுவதல்லால், முன்னிய முகமன் மாட்டா- அவனது சினத்தை அஞ்சிப் பொருந்துமாற்றால் முகமன் கூறுதலில்லாத, முற்றிய அறிவினாரை - கல்விகேள்விகளான் நிறைந்து முதிர்ந்த அறிவுடைய அமைச்சர்களை, மன்னவன் மகிழ்ந்து நோக்கி - பயாபதி மன்னன் விரும்பிப் பார்த்து, வாழ் உயிர் வவ்வும் காலன்தன்னை - இனிதே வாழா நின்ற உயிர்களைக் கவர்கின்ற மறலியை, நாம் இகந்து சேரும் சரண் பிறிது உரைமின் என்றான் - யாம் கடந்து எய்துதற்குரிய புகலாவது பிறிதொன்றனைக் கூறுங்கோள் என்றான், (எ - று.) | |
| | | |
|
|