பக்கம் : 1159 | | வன்மையினையுடைய, பரிகின்ற படர் - வருந்துதற்கேதுவாகிய துயரங்களை, ஒழிமனத்தன் ஆனான் - ஒழிந்து விளக்கமுடைய மனத்தை உடையனா யினான், ( அவன் யாரெனில்) சொரிகின்ற மதுவின் மாரித்துவலையின் நனைந்த தாரான் - பொழியா நின்ற தேன் மழையின் துளியாலே நனைதலையுடைய வெற்றி மாலை அணிந்த பயாபதி வேந்தன், (எ - று.) உயிரின் துயர்க்கெல்லாம் காரணமாதல் பற்றிக் காதிதன்னால் உரிமைவல்ல படர் என்றார். எரிகின்ற விளக்கின்கண் நெய் பெய்து திரியையும் தூண்டிவிட்டாற் போன்று பயாபதி மன்னன் அமைச்சர் அறிவுரைகளாலே விளக்கமுற்று துயர் தீர்ந்தான் என்க. | (733) | | விழா முரசறையப் பணித்தல் | 1864. | 2கரும்பணி மொழியி னார்தங் கருந்தடங் கண்ணும் வண்டும் சுரும்பணை முலையி னாருந் தொடையலுந் துதைந்த மார்பன் அரும்பணி யசோக நீழ லடிகள தணிபொற் கோயில் விரும்பணி விழவு சாற்றி வியன்முர சறைக வென்றான். | (இ - ள்.) கரும்பு அணி மொழியினார்தம் - கரும்பை ஒத்த இனிமையுடைய அழகிய மொழிகளையுடைய மகளிரின், கருந்தடங்கண்ணும் - கரியவாய் அகன்ற கண்களும், வண்டும் - வண்டினங்களும், சுரும்பு அணை முலையின் ஆரும் தொடையலும் - வண்டுகள் மொய்க்கின்ற அம்மகளிரின் முலையிடத்தே பொருந்திய பூந்தொடையல்களும், துதைந்த மார்பன் - செறிந்த மார்பையுடையவனாகிய பயாபதி வேந்தன், அரும்பு அணி அசோக நீழல் அடிகளது - அரும்புகளாலே அழகுடைய அசோக மரத்தினது நீழலிலே எழுந்தருளிய அருகக்கடவுளின், அணிபொன் கோயில் - அழகிய பொன்னாலியன்ற திருக்கோயிலின்கண், விரும்பு அணி விழவு சாற்றி - சான்றோர்களால் விரும்புதற்குரிய அழகுடைய விழா நிகழ்ச்சியை அறிவித்து, வியன் முரசு அறைக என்றான் - அகலிதாய முரசத்தை முழக்குங்கோள் என்று பணித்தருளினான், (எ - று.) அமைச்சரின் உரைகேட்ட பயாபதி மன்னன் அசோக நீழலடிகட்கு விழவு சாற்றி முரசறைக என்றான் என்க. | (734) | |
| (பாடம்) 1 கரும்பிணி. | | |
|
|