பக்கம் : 1160 | | வள்ளுவர், விழாச் சிறப்புரைத்து முரசம் முழக்குதல் | 1865. | ஒளியவ னுலகம் தன்னுட் கரந்தவ னுயிர்க ளுய்யும் அளியவ னருள்செய் யாழி யுடையவ னடிமை செய்வார்க் கெளியவ னெந்தை பெம்மாற் கியற்றிய விழவின் மிக்க களியவ ரென்ப செம்பொற் கதிர்முடி சூடு வாரே. | இது முதல் மூன்று செய்யுள், ஒரு பொருள்மேல் அடுக்கிவந்தன. (இ - ள்.) ஒளியவன் - ஒளிப்பிழம்பானவன், உலகந் தன்னுட் கரந்தவன் - உலகங்களினூடே மறைந்து நின்றவன், உயிர்கள் உய்யும் அளியவன் - உயிர்களைப் பிறவிப் பெருங்கடலினின்றும் கரையேற்றி உய்யக் கொள்வதொரு பேரருள் உடையவன், அருள்செய் ஆழியுடையவன் - அறப் பேராழியை உடையவன், அடிமை செய்வார்க்கு - தன்னடிகளிலே வழிபடுதலுடையார்க்கு, எளியவன் - எளிதில் அறியப்படுபவன், எந்தை - எம் தந்தையாகியவன், பெம்மாற்கு - ஏவர்க்கும் பெருமான் என்று கூறப்படுகின்ற அருகக்கடவுளுக்கு, இயற்றிய - எடுக்கப்பட்ட, விழவின்மிக்க களியவர் - திருவிழாக் காட்சியிலே மிகுந்த மகிழ்ச்சி கொள்ளும் இயல்பைபுடையோர், செம்பொற் கதிர்முடி சூடுவார் என்ப - இவ்வுலகத்தை ஆளும் மன்னராய்ப் பிறந்து ஒளியுடைய முடிசூட்டிக் கொள்வோர் ஆவர் என்று சான்றோர் கூறுவர், (எ - று.) “இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டுÓ என்னும் திருக்குறட் கருத்தை ஈண்டுக் காண்க. இறைவன் விழாவை விரும்பிக் காண்போர் அப்புண்ணியப்பயனால் மன்னராய்ப் பிறந்து மணிமுடி சூடுவர் என்க. | (735) | | | 1866. | அருள்புரி யழலஞ் சோதி யாழியா னாதி யில்லான் மருள்புரி வினைகட் கென்று மறுதலை யாய வாமன் இருள்புரி யுலகஞ் சேரா வியனெறி பயந்த பெம்மான் பொருள்புரி விழவு காண்பார் புண்ணிய வுலகங் காண்பார். | | | |
|
|