பக்கம் : 1162 | | விழா முரசு அறைதல் கேட்ட நகரம் மகிழ்தல் | 1868. | எல்லைசான் முரசிற் சாற்றி யின்னன வறைத லோடும் மல்லன்மா நகரங் கேட்டே வானுல கிழிந்த தேபோன் முல்லைவான் கண்ணி சூடி 1முகிழ்நகைக் கலங்க டாங்கிச் செல்லும்வாய் தோறுஞ் செல்வ விழவணி 2தேர்த்த தன்றே. | (இ - ள்.) எல்லைசால் முரசில் சாற்றி - நகரின் எல்லை முழுதும் ஒலியுடைய முரசினை அறைந்து, இன்னன அறைதலோடும் - இத்தகைய மொழிகளை வள்ளுவர்கள் கூறி அறிவித்தவுடனே, மல்லல்மா நகரங் கேட்டே - வளப்பமுடைய பெரிய நகரத்தே வாழுகின்ற மக்கள் கேள்வியுற்று, வான் உலகு இழிந்ததேபோல் - தேவருலகம் இப்பூமியின்கண் வந்து இறங்கினாற்போன்று, முல்லைவான் கண்ணி சூடி - முல்லை மலராலாய தூய முடிமாலையணிந்து, முகிழ்நகைக் கலன்கள் தாங்கி - ஒளி தோன்றித் திகழ்தலையுடைய அணிகலன்களை அணிந்து, செல்லும் வாய்தோறும் - போகுமிடங்கடோறும், செல்வ விழவு அணி தேர்த்தது அன்றே - சிறப்புடைய விழாவிற்குரிய ஒப்பனைகளைச் செறியப் புனைந்தனர், (எ - று.) நகரம் தேர்த்தது என்க. நகரம் : ஆகுபெயர். இவ்வாறு விழா முரசறைந்தவுடனே மக்கள் கண்ணிசூடிக் கலன்கள் தாங்கிச் செல்லும்வாய் தோறும் விழாவிற்குரிய ஒப்பனை செய்தனர் என்க. | (738) | | இதுவுமது | 1869. | இன்னிசை முரசங் கேட்டே மெய்பெரி தினிய கேட்டா மன்னிய நங்கள் வாணாள் வாழ்கநம் மிறைவ னென்னாப் பொன்னியன் மலருஞ் சாந்துஞ் சுண்ணமும் புகையும் பொங்கத் துன்னிய நகர மாந்தர் 3துறக்கம்பெற் றவர்க ளொத்தார். | |
| (பாடம்) 1 முகிழ்நகை. 2 தொத்த. 3துறக்கம் புக்கவர்க. | | |
|
|