மேலும் வெளிய மருப்புடைய களிறுகளிலே ஏறி வெண்டாமரைப் பூவாகிய பலியை விண்ணோர் மருள ஏந்தி உலகம் மருளுமொரு தோற்றத் தோடே பொலிந்தனர் என்க. |
(744) |
|
மன்னர்கள் செவ்வணி அணிந்து திருவிழாவிற்கெழுதல் |
1875 | செம்மலர்க் கண்ணியர் செம்பொற் றாரினர் கொய்ம்மலர்க் குங்குமங் குழைந்த சாந்தினர் கைம்மலர் மணிநகைக் கடகம் வில்லிட மெய்ம்மல ரணியினர் வேந்த ராயினார். |
(இ - ள்.) செம்மலர்க் கண்ணியர் - சிவந்த நிறமுடைய மலர்களானாய முடிமாலையை உடையராய், செம்பொற்றாரினர் - சிவந்த அழகுடைய மாலைகளை அணிந்தவராய், கொய்ம்மலர்க்குங்குமம் குழைந்த சாந்தினர் - கொய்தற்குரிய செம்மலர்கொண்டு புனையப்பட்ட தோள்மாலையோட சிவந்த குங்குமத்தாலாய சாந்தம் பூசியவராய், கைம்மலர் மணிநகைக் கடகம் வில்லிட - தங்கையாகிய மலர்களிடத்தே செறிக்கப்பட்ட கடகம் என்னும் அணிகலன் ஒளிபரப்ப, மெய்ம்மலர் அணியினர் - உடலிடத்தே திகழ்கின்ற அணிகலன்களையும் அணிந்து கொண்டவராய், வேந்தர் ஆயினார் - மன்னர்கள் கோலங் கொண்டவராயினார், (எ - று.) அந்தணர் வெள்ளணி அணிந்தாற்போன்று) அரசர்கள் செம்மலர் மாலை சூடிக் குங்குமம் திமிர்ந்து செஞ்சாந்துபூசி செந்நிற மணியணிகலன் பூண்டனர் என்க. |
(745) |
|
இதுவுமது |
1876. | 1செந்நிறக் குவளைகை செய்த சூட்டினர் அந்நிறந் தழுவிய வரத்த வாடையர் மெய்ந்நிறஞ் செய்யன வேழ மீமிசைக் கைந்நிற மலரொடு கலந்து தோன்றினார். |
(இ - ள்.) செந்நிறக் குவளைகை செய்த சூட்டினர் - சிவந்த நிறமுடைய செங்கழு நீர்மலரால் புனையப்பட்ட முடிமாலையை உடையராய், அந்நிறம் தழுவிய அரத்த ஆடையர் - அந்த நிறமே கொண்ட சிவந்த ஆடைகளை உடுத்தவராய், மெய்ந்நிறம் செய்யன வேழம் மீமிசை - உடலின் நிறம் சிவப்பாம்படி ஒப்பனை செய்யப்பட்ட யானைகளின் பிடரின் மிசை, கைந்நிறமலரொடு கலந்து தோன்றினார் - தத்தம் கைகளின் நிறமாகிய செந்நிறமமைந்த பூப்பலியோடே சேர்ந்து விளங்குவாராயினர் மன்னர்கள், (எ - று.) |
|
|
(பாடம்) 1 செய்ந்நிற. |