பக்கம் : 1168 | | மேலும் அவ்வணிகர்கள், பொன்னாடையுடுத்துப், பொன்மலர்ப் பலி ஏந்தி, யானைமேல் நிரைத்துத், தம் மகளிருடனே போந்தனர் என்க. | (778) | | பயாபதி வேந்தன் யானைமேல் வருதல் | 1879. | நகரமாங் கெழுந்தபி னரலுஞ் சங்கொடு முகுரவாய் மணிமுர சதிரு மூரிநீர் மகரமால் கருங்கடன் மருளுந் தானையான் சிகரமால் யானைமேற் செல்வன் றோன்றினான். | (இ - ள்.) நகரம் ஆங்கு எழுந்தபின் - நகரத்தில் வாழும் மக்கள் அவ்வாறு எழுந்தவுடனே, நரலும் சங்கொடு - முழங்குகின்ற சங்குகளுடனே, முகுரவாய் - கண்ணாடி போன்ற வாயை யுடைய, மணிமுரசு அதிரும் - அழகிய முரசங்கள் முழங்கும், மூரிநீர் - பெருகிய நீரையுடைய, மகரமால் கருங்கடல் - மகரமீன்கள் உலவுகின்ற பெரிய கருமையான கடலைப்போலும், தானையான் - படையையுடைய பயாபதி வேந்தனாகிய, செல்வன் - செல்வமிக்கோன், சிகரமால் யானை மேல் தோன்றினான் - மத்தக முடியையுடைய பெரிய யானை மேலே வந்தான், (எ - று.) முரச முழக்கும்தானை, கடல்போலும் தானை, என்று கூட்டுக. நகரமக்கள் அவ்வாறு எழுந்தவுடன் தானையான், செல்வன் யானை மேற் றோன்றினான் என்க. | (779) | | திவிட்டநம்பியின் வருகை | 1880. | வேல்புரை கண்ணியர் கவரி வீசவெண் பால்புரை பவழக்காற் குடையி னீழலான் மால்புரை கருங்கடல் வளாகங் காவலன் கால்புரை புரவியங் கடலுட் டோன்றினான். | (இ - ள்.) வேல் புரை கண்ணியர் - வேலை ஒத்த கண்களையுடைய மகளிர்கள், கவரிவீச - சாமரை யிரட்ட, பவழக்கால் - பவளத்தாலியன்ற காலையும், வெண்பால் புரை - வெள்ளையான பால்போன்ற நிறத்தையும் உடைய, குடையின் நீழலான் - குடை நீழலையும் உடையவனாய், மால்புரை - திருமாலை ஒத்த, கருங்கடல் வளாகம் காவலன் - கரிய கடலாற் சூழப்பட்ட நிலவுலகத்தை ஓம்பும் திவிட்டமன்னனும், கால்புரை - காற்றைப்போன்று விரைந்த செலவினையுடைய, புரவியம் கடலுள் தோன்றினான் - குதிரைப் படையாகிய அழகிய கடலின் நடுவே தோன்றுவானாயினான், (எ - று.) | |
| | | |
|
|