பக்கம் : 1169 | | திவிட்ட நம்பி கண்ணியர் கவரிவீசக் குடையின் நீழலான், புரவியங்கடலுள் தோன்றினான் என்க. | (780) | | | 1881. | புதமெழு புரவிகள் புடை 1பரந்திட மதமழை பொழிவன வயிரக் கோட்டன கதமழ லெழவுமிழ் தகைய 2காணில விதமெழு களிறுகள் பலமி டைந்தவே. | (இ - ள்.) புதம் எழு புரவிகள் - தாவி எழா நின்ற குதிரைகள், பரந்திட - மிக்குப் பரவாநிற்ப, மதமழை பொழிவன - மதநீரை மழைபோன்று மிக்கு உகுப்பனவும், வயிரக்கோட்டன - வயிர மணியாலியன்ற பூண் செறிக்கப்பட்ட கோடுகளையுடையனவும், கதம் அழல் எழ உமிழ் தகைய - சினத்தீ மிக்கெழுமாறு காலும் தன்மையுடையனவும், காண் நிலவிதம் எழு களிறுகள் - காணத்தகுந்த ஒளிவகைகள் பலவும் தோன்றித் திகழும் ஒப்பனையுடையனவும் ஆகிய களிற்றியானைகள், பலமிடைந்தவே - பற்பல குழீஇயின, (எ - று.) நில - நிலா. புரவிகள் பரவ, களிறுகள் பொழிவனவாய்க் கோட்டனவாய்த் தகையனவாய் மிடைந்த என்க. | (781) | | 1882. | ஆர்த்தன பல்லிய மதிர்ந்த குஞ்சரம் தேர்த்தன தேர்க்குழாந் 3திகைத்த பல்லுயிர் போர்த்தன கொடிமிடை பொழிந்த பூமழை வேர்த்தன விளிந்தன 4வினைக ளென்பவே. | (இ - ள்.) பல்லியம் ஆர்த்தன - இசைக்கருவிகள் ஆரவாரித்தன, குஞ்சரம் அதிர்ந்த - யானைகள் பிளிறின, தேர் குழாம் தேர்த்தன - தேர்க் கூட்டங்கள் நெருங்கின, பல் உயிர் திகைத்தன - பல்வேறு உயிர்களும் திகைப்புற்றன, மிடை கொடி போர்த்தன - செறிந்த கொடிகள் விசும்பை மறைத்தன, மழை பொழிந்த - மலர்மாரி பொழியப்பட்டன, வினைகள் வேர்த்தன விளிந்தன என்பவே - தீயவினைகள் உடல் வெயர்த்து இறந்தொழிந்தன என்று சான்றோர் கூறுவர், (எ - று.) | |
| (பாடம்) 1 பரந்திடை. 2 கானில்.3 திசைத்த. 4 வினைய. | | |
|
|