பக்கம் : 1171
 

     மயிற்பீலி வட்டமும் ஆலவட்டமும் கதிரவனை மறைத்து நெருங்கின;
அவ்விடத்தே கால் இயங்கவும் இடமில்லை என்க.

(784)
 
 
1885. சந்தனஞ் செறிந்தன செப்புந் தண்புகைக்
கந்தமே நிறைந்தன கரண்ட கங்களும்
1கொந்துமொய்ம் மலர்நிறை கோடி கங்களும்
உந்தியொன் றொன்றினை யூன்று கின்றவே.
 
     (இ- ள்.) சந்தனம் செறிந்தன செப்பும் - சந்தனக் குழம்பு நிறைக்கப்பட்ட செப்புகளும்
தண்புகைக் கந்தமே நிறைந்தன கரண்டகங்களும் - குளிர்ந்த மணப்புகை நிறைக்கப்பட்ட
செப்புகளும், கொந்து மொய்ம் மலர் நிறை கோடிகங்களும் - கொத்தாகச் செறிந்த
மலர்களால் நிறைக்கப்பட்ட பூந்தட்டுகளும், உந்தி ஒன்று ஒன்றினை ஊன்றுகின்றவே -
ஒன்றனை ஒன்று தள்ளி நெருக்குற்றன, (எ - று.)

     செப்பும் கரண்டகமும் கோடிகமும் ஒன்றினை ஒன்று நெருங்கித் தள்ளின என்க.

(785)

 
 
1886. நிரந்தன பூப்பலி நிரைகொண் மாரியாய்ச்
சொரிந்தன சுரும்பிவர் துணர்கொள் பூமழை
பரந்தன மங்கலப் பதாகை யவ்வழிக்
கரந்தன கருவினைக் குழாங்க ளென்பவே.
 
     (இ - ள்.) பூப்பலி நிரந்தன - கடவுட்கிடும் பூப்பலிகள் யாண்டும் பரவின, சுரும்பு
இவர் துணர்கொள் பூமழை - வண்டுகள் மொய்க்கின்ற கொத்துக்களைக் கொண்ட
மலர்மாரி, நரைகொள் மாரியாய்ச் சொரிந்தன - ஒழுங்குபட்ட மழை போன்று மிக்குப்
பொழியப்பட்டன, மங்கலப் பதாகை - மங்கலத்திற்கு அறிகுறியான கொடிகள், பரந்தன -
பரவின, அவ்வழி - அவ்விடத்தே, கருவினைக் குழாங்கள் கரந்தன என்பவே -
பிறப்பிற்குக் காரணமான வினைக் கூட்டங்கள் மட்டும் மறைந்தன என்று அறிவுடையோர்
கூறுவர், (எ - று.)

     கரு - பிறப்பு. கருவினை - தீவினை எனினுமாம். கடவுட்கிடும் பூப்பலி மழைபோல
மிக்குப் பொழிந்தன. பரந்தன மங்கலப் பதாகை, கருவினைக் குழாம் ஒளிந்தன என்க.

(786)

 

     (பாடம்) 1 கொந்துமேய்.